SHUTTER ISLAND (2010) - திரை விமர்சனம்


இது இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான திரைப்படம்.. இதே பெயரில் நாவலாக வெளிவந்து பின் திரைப்படமானது. இந்த காரணத்திற்காகவும், இது ஒரு திரில்லர் திரைப்படம் என்பதனாலும் இதனைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. நேற்றுதான் நேரம் கிடைத்தது.

1954 ஆம் ஆண்டில் படம் தொடங்குகிறது...


இரண்டு மார்ஷல்கள்  ஷட்டர் ஐலேண்டில் இருக்கும் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற ஒரு நோயாளியைக் கண்டுபிடிப்பதற்காக கப்பலில் பயணிக்கிறார்கள். அதில் ஒருவர்தான் டிகாப்ரியோ.


மிகவும் அபாயகரமான நோயாளிகள் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை அது. அந்த தீவிலேயே அந்த மருத்துவமனை மட்டும்தான் இருக்கிறது. அங்கு இந்த மார்ஷல்களை அவர்கள் நடத்தும் விதம் அங்கு இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை.. டீகாப்ரியோவிற்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.


காணாமல் போனதாகச் சொல்லப்படும் நோயாளி ரேச்சல் சொலாண்டோ ஒரு பெண். அவள் அவளது மூன்று குழந்தைகளைக் கொன்ற ஒரு சைக்கோ என்கிறார்கள்.


அந்த விசாரனையின் போதே டிகாப்ரியோவுக்கும் தலை சுற்றுகிறது.. அதற்காக அவனுக்கு அங்கு மருந்து தரப்படுகிறது.


ரேச்சலுக்கு பழகும் சந்தர்ப்பம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பவர்களிடம் எல்லாம் ஆண்ட்ரூ லாடிஸ் என்ற பெயரை உச்சரித்து அவரைத் தெரியுமா என்று கேட்கிறார் டீகாப்ரியோ. அந்த பெயரைக் கேட்டவுடன் அனைவரும் அதிர்ந்து எழுந்து பதட்டத்துடன் ஓடாத குறையாக சென்று விடுகின்றனர். நமக்கும் யார் அந்த ஆண்ட்ரூ லாடிஸ் என்ற எதிர்பார்ப்பு வந்துவிடுகிறது.


இதனிடையே டீகாப்ரியோவிற்கு அவர் இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்ற போது நடந்த நிகழ்வுகள் மற்றும் தீவிபத்தில் இறந்த அவனது மனைவி போன்ற சம்பவங்கள் நினைவுகளாகவும், கனவாகவும் வந்து அவஸ்தைப் படுத்துகின்றன.


இறந்த அவரது மனைவி கனவிலும் நினைவிலும் வந்து அடிக்கடி இதைச் செய் இதைச் செய்யாதே என்கிற ரீதியில் எதையாவது சொல்கிறார். அதனாலும் டீகாப்ரியோ குழம்புகிறார்.


தன் மனைவி இறந்ததற்கு காரணம் ஆண்ட்ரூ லாடிஸ்தான். அவர் தற்போது இந்த மருத்துவமனையில்தான் இருக்கிறார். மேலும் இந்த மருத்துவமனையில் நிறைய சித்திரவதைகள் நடக்கின்றன அதனைக் கண்டுபிடித்து உலகிற்குச் சொல்வதற்காகவே தான் இங்கு வந்திருப்பதாக தன் உடன் வந்த மார்ஷலிடம் டீகாப்ரியோ தெரிவிக்கிறார்.


ரேச்சலின் அறையில் ஒரு துண்டுச் சீட்டு அவர்களுக்குக் கிடைக்கிறது. அதில் யார் அந்த 67 ஆம் நபர்? என்ற கேள்வி இருக்கிறது.


யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.. அது என்னவாக இருக்கும் என நாமும் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.


அந்த மருத்துவமனையில் மொத்தம் இருப்பதே 66 நோயாளிகள்தான் என்ற உண்மை டீகாப்ரியோவிற்கு தெரியவருகிறது. அப்படியானால் 67 வதாக ஒரு நோயாளி நிச்சயம் இங்கு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கிறார் டீகாப்ரியோ. அந்த 67 வது நோயாளி யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நமக்கும் எகிறிவிடுகிறது. ஆனால் இறுதியில் அந்த 67 வது நோயாளி யார் எனத் தெரியவரும் போது.. உண்மையில் நாமும் சிறிது குழம்பி பின் தெளிந்து அதிர்ந்து போகிறோம்.


இந்த விசாரணையின் போதே திடீரென காணாமல் போன ரேச்சல் கிடைத்து விட்டார் என்று அவரை டீகாப்ரியோவிற்கு அறிமுகப்படுத்துகின்றனர். அவர் தான் மருத்துவமனையில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் வீட்டில் இருக்கிறோம். உடன் இருப்பவர்கள் அனைவரும் அவரது சேவகர்கள் என்ற நினைப்பில் இருக்கிறார்.


டீகாப்ரியோவிடம் அவரது நினைவுகளை அவர் தெரியப்படுத்துகிறார்... பின் திடீரென டீகாப்ரியோவை அவரது கணவராக நினைத்து கட்டி அணைக்கிறார். கட்டி அணைக்கும் போதே திடீரென நினைவு வந்தவராய்.. இறந்த என் கணவர் எரிந்துவிட்டார்.. யாரடா நீ என்று கூச்சல் போடுகிறார். அதிர்ந்து விடுகிறார் டீகாப்ரியோ.. மீண்டும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது மருந்து தரப்படுகிறது.



அந்த தீவில் ஒரு கலங்கரை விலக்கம் இருக்கிறது. அங்கு என்ன இருக்கிறது.. அங்கு ஏதோ மர்மம் இருப்பதாக டீகாப்ரியோ நினைக்கிறார்.
எப்படியாவது அங்கே சென்று பார்த்துவிட வேண்டும் என அதற்கு திட்டமிடுகிறார்.

அங்கே அவரும் உடன் வந்த மார்ஷலும் செல்கின்றனர். செல்லும் வழியில் டீகாப்ரியோவிற்கும் உடன் வந்த மார்ஷலுக்கும் தகராறு வந்துவிடுகிறது. தான் மட்டும் தனியாக அந்த கலங்கரை விலக்கத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டு டீகாப்ரியோ முன்னே நடக்கிறார். பின் திரும்பிப் பார்க்கிறார். அங்கே அந்த மார்ஷலைக் காணோம். அந்த மார்ஷலின் பெயர் சக்.. அங்கே சென்று பார்க்கிறார். இந்த சம்பவம் நடப்பது உயரமான ஒரு பாறைக்கு அருகில், கீழே கடல்..


அங்கு சென்று பார்த்தால் சக் கீழே விழுந்து இறந்து கிடக்கிறார். பதறியடித்துக் கொண்டே இவரும் சிரமப்பட்டு பாறைகளைப் பிடித்து கீழே இறங்கிப் பார்த்தால் அவர் அங்கு இல்லை.


என்னடா இதுன்னு டீகாப்ரியோ அதிர்ச்சியோட பாத்துட்டு இருக்கும் போதே.. அங்க ஒரு பொந்தில் இருந்து ஆயிரக்கணக்கான எலிகள் வந்து அவர் நின்னுட்டிருந்த பாறையைச் சூழ்ந்துக்கும்..


வேக வேகமா அவரு மறுபடியும் பாறைல மேல ஏறுனா.. அங்க சின்னதா ஒரு குகை இருக்கும்.. அதுக்குள்ள வெளிச்சமா இருக்கேன்னு உள்ள போய் பார்த்தா... அங்க ரேச்சல் இருப்பாங்க..


என்னடா ரேச்சல்தான் கிடைச்சிட்டாங்களே... மருத்துவமனைக்குள்ள வந்த ரேச்சல் மறுபடியும் இங்க எப்படி வந்தான்னு குழம்பாதீங்க.. மேல படிங்க...


நான்தான் உண்மையான ரேச்சல்னு டீகாப்ரியோகிட்ட சொல்வாங்க அவங்க.. அவங்க மூனு குழந்தைகளைக் கொலை பண்ணினதைப் பத்தி டீகாப்ரியோ கேப்பார். அதுக்கு அவங்க எனக்கு குழந்தைகளே கிடையாது நான் கல்யாணமே பண்ணிக்கலை.. உண்மையில் நான் நோயாளியே கிடையாது... இந்த மருத்துவமனையில் வேலை பார்த்துட்டு இருந்த டாக்டர் நானுன்னு சொல்வாங்க...


அப்புறம் அவங்க டீகாப்ரியோகிட்ட ஒரு கேள்வி கேப்பாங்க. டீகாப்ரியோவுக்கு அதிர்ச்சியா இருக்கும். நமக்கும்தான்.. அவங்க என்ன கேப்பாங்கங்கறதை நீங்க படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கங்க...


அதுமட்டும் இல்லாம அந்த மருத்துவமனையில் மக்களை ஆராய்சிப் பொருளாப் பயன்படுத்தறது பத்தியும் அவங்க மூளையில நடக்கிற அறுவை சிகிச்சை பத்தியும் சொல்வாங்க. இது அங்க இருக்கற எல்லா ஊழியர்களுக்கும் தெரியும்னு சொல்வாங்க. அந்த கலங்கரை விலக்கத்துலதான் மூளை அறுவை சிகிச்சை நடக்குதுன்னும் சொல்வாங்க. டீகாப்ரியோவுக்கு அங்க போகனும்ங்கற எண்ணம் இன்னும் அதிகமாகிடும்.


ஒரு வழியா டீகாப்ரியோ அந்த கலங்கரை விலக்கத்துக்கு போய்டுவார். அங்க போய் பார்த்தா... அங்கே...


இதுக்கப்புறம் நடக்கறது எதையும் நான் சொல்லமாட்டேன்.. நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க.. இதுவரை நான் சொன்ன கதை கதையே இல்லை (அடப்பாவி...அப்ப ஏண்டா இப்படி சுத்துனங்கிறீங்களா..) இனிமேதான் இருக்கு மேட்டரே..


அவரும் அதிர்ச்சியாகி, குழம்பி நாமும் அதிர்ச்சியாகி குழம்பி... நம்ம மூளை அப்படியே டீகாப்ரியா மூளையாவே மாறி யோசிச்சிட்டிருக்கும்.. அந்த அனுபவம் ரொம்ப நல்லா இருந்தது...


இந்தப் படம் பார்த்து முடிச்சவுடனே மறுபடியும் பார்க்கத் தோணுச்சு... இரண்டாம் முறை பார்க்கும் போது அது வேற அர்த்தத்தைக் கொடுக்கும்..


மைல்டான திரில்லர் படமான் இதுல இடைல இடைல கொஞ்சம் போரடிக்கற மாதிரி காட்சிகள் இருக்கும்.. ஆனா முதல் முறை பார்க்கும் போதுதான் அந்த சீனெல்லாம் போரடிக்கும். இரண்டாவது முறை பார்க்கும் போது அந்த காட்சியை வெச்சது சரிதான்னு தோணும்..


டீகாப்ரியோவோட நடிப்பு கிளாஸ். வழக்கம் போல இதையும் அவர் நடிப்புக்காக ஆஸ்காருக்கு நாமினேட் பன்னுவாங்க.. பாவம் அவருக்குதான் அந்த ராசி இல்லையே...


கட்டாயம் இரண்டாம் முறை பார்க்க வேண்டிய படம் இது..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-