கிறிஸ்மஸ் மரமும், கிறிஸ்தவ மதமும்


கிறிஸ்து பிறப்பு என்றதும் கண்களுக்குள் விரியும் காட்சியில் ஒளியூட்டப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட, சிறு சிறு நட்சத்திரங்கள் மின்னும் ஒரு கிறிஸ்மஸ் மரம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். மனித நேயத்தின் உச்சபட்ச வெளிப்பாடாக இயேசுவின் வருகையை நம்புகிறது கிறிஸ்தவம். உலகின் மீது கடவுள் கொண்ட தாயன்பை நினைவுபடுத்தும் இந்த கிறிஸ்து பிறப்பு தினத்தில் தவிர்க்க முடியாத ஒரு விழாக்காலச் சின்னமாக விளங்குகிறது கிறிஸ்மஸ் மரம்.
ஒரு ஏழை விறகு வெட்டி இருந்தான். ஏழ்மையின் உச்சத்தில் இருந்த அவனை பட்டினியின் பிடியிலிருந்த சிறுவன் ஒருவன் ஒரு கிறிஸ்மஸ் தினத்தன்று சந்தித்து பசிக்கு ஏதேனும் தர முடியுமா என்று கேட்டான். சிறுவனின் சோர்வைக் கண்ட அந்த விறகுவெட்டி தனக்காய் வைத்திருந்த சிறு உணவை அவனுக்கு வழங்கிவிட்டு பசியுடன் தூங்கினான். மறுநாள் காலையில் தன்னுடைய வீட்டிற்கு முன்னால் ஒரு மரம் அழகாய் ஜொலித்தபடி புதிதாய் நிற்பதைக் கண்டு வியப்படைந்தான். நேற்றைய இரவில் தன்னுடன் உணவருந்தியது இயேசுவே என்றும், இவனுடைய மனிதநேயத்தைப் பாராட்டி அவர் தந்த பரிசே அந்த கிறிஸ்மஸ் மரம் என்றும் அவன் நம்பினான். இது கிறிஸ்மஸ் மரத்தின் தோற்றம் பற்றி சொல்லப்படும் கதைகளில் ஒன்று.
எகிப்திய நாட்டு மக்களின் பழமையான கலாச்சாரங்களில் பசுமையை வழிபடுதலும் ஒன்றாய் இருந்தது. அதிலும் குறிப்பாக குளிர் காலங்களில் மரங்கள் எல்லாம் நிராயுதபாணிகளாய் இலைகளை இழந்து நிற்கையில் பேரீச்சை இலைகளை வெட்டி வந்து வாழ்வின் மறுமலர்ச்சி விழா, அல்லது சாவை வெற்றி கொண்ட விழா கொண்டாடுவது அவர்களுடைய வழக்கம்.
ரோமர்களின் கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய சாத்துர்னாலியா விழாவே விவசாயக் கடவுளை வழிபடும் விழா தான். அந்த நாளை பச்சை இலைகளுடனும், தாவரங்களுடனும் கொண்டாடுவதே அவர்களுடைய வழக்கம். வீடுகளையெல்லாம் இலை தோரணங்களால் அலங்கரிப்பது அவர்களுடைய விழாவின் சிறப்பம்சம்.
பிரிட்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பச்சை இலைகளையும், கொம்புகளையும் வாசல்களில் தொங்க விட்டால் தீய ஆவிகள் அணுகாது என்னும் நம்பிக்கை ஆழமாக இருந்தது.
ஜெர்மனியே கிறிஸ்மஸ் மரத்தின் பிறப்பிடம் என்னும் சிறப்புப் பெருமையைப் பெறுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புனித போனிபேஸ் என்பவர் ஜெர்மனியில் கிறிஸ்தவ மத போதனைகளைச் செய்து கொண்டிருந்தபோது ஒரு கூட்டம் மக்கள் அங்குள்ள ஓக் மரம் ஒன்றை வழிபடுவதைக் கண்டார். அதைக்கண்டு கோபமடைந்த அவர் அந்த மரத்தை வெட்டி வீழ்த்த அதனடியிலிருந்து உடனடியாக ஒரு கிறிஸ்மஸ் மரம் முளைத்து வளர்ந்ததாக கூறப்படும் கதையே கிறிஸ்மஸ் மரத்தைக் குறித்து பெரும்பாலான மக்களால் சொல்லப்படும் கதை.
அந்த மரம் முளைத்த செயலை இயேசுவின் உயிர்ப்போடு தொடர்பு படுத்தி தன்னுடைய கிறிஸ்தவ போதனையை மும்முரப்படுத்தினார் அவர். ஆனாலும் அந்த மரம் அப்போதெல்லாம் அலங்காரப் பொருளாகவோ, கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படவோ இல்லை.
ஜெர்மானியர்கள் தான் கிறிஸ்மஸ் மரத்தை முதலில் வீடுகளுக்குள்ளும் அனுமதித்தவர்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்மஸ் மரங்கள் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு விழாக்களில் பயன்படுத்தப்பட்டிருந்தன என்பது வியப்பூட்டும் செய்தி.
சுமார் ஆயிரத்து ஐநூறாம் ஆண்டு மார்ட்டின் லூத்தர் கிங் ஒரு கிறிஸ்மஸ் கால பனி நாளில் பனி படந்த சாலை வழியாக நடந்து செல்கையில் சிறு சிறு பச்சை மரங்களின் மீது படந்திருந்த பனி வெளிச்சத்தில் பிரமிக்கவைக்கும் அழகுடன் ஒளிர்வதைக் கண்டார்.
உடனே ஒரு ஃபிர் மரத்தை எடுத்து அதை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதை கிறிஸ்து பிறப்பு விழாவில் பயன்படுத்தினார். கிறிஸ்மஸ் மரம் அலங்காரங்களுடன், கிறிஸ்மஸ் விழாக்களில் நுழைந்தது இப்போதுதான் என்பதே அறியப்படும் செய்தி.
1521ல் பிரான்ஸ் இளவரசி ஹெலீனா தனது திருமணத்திற்குப் பிறகு ஒரு கிறிஸ்மஸ் மரத்தை பாரீஸ் நகருக்குக் கொண்டுவந்து விழா கொண்டாடியதே கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்மஸ் மரம் நுழைந்ததன் முதல் நிகழ்வாக வரலாறு குறித்து வைத்திருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிறிஸ்மஸ் மர அலங்காரம் வெகுவாகப் பரவிவிட்டது.
இங்கிலாந்துக்கு இந்த கிறிஸ்மஸ் மரம் வந்த விதம் சுவாரஸ்யமானது. இங்கிலாந்து அரசி விக்டோ ரியா அடிக்கடி ஜெர்மனி நாட்டுக்குப் பயணம் செய்வதுண்டு. அப்படிப்பட்ட பயணங்கள் அவருக்கு  ஜெர்மனிநாட்டு இளைஞர் இளவரசர் ஆல்பர்ட் டுடன் காதலை வளர்த்தன.
திருமணம் செய்துகொண்ட இருவரும் இங்கிலாந்து திரும்பினார்கள். 1841ல் அரசர் ஆல்பர்ட் ஒரு அலங்காரம் செய்த மரத்தை இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் மாளிகையில் வைத்து விழா கொண்டாடினார். அதுவே கிறிஸ்மஸ் மரத்தின் இங்கிலாந்து பிரவேசம்.
அந்த கிறிஸ்மஸ் மரம் அழகிய பொம்மைகளாலும், சிறுசிறு கைவினைப் பொருட்களாலும், நகைகளாலும், சிறு சிறு இசைக்கருவி  வடிவங்களாலும், பழங்களாலும், மெழுகுவர்த்திகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அரசி அந்த மரத்தின் அழகில் மயங்கியதால், விழாக் கொண்டாட்டத்தில் அதையும் சேர்த்துக் கொண்டார். இங்கிலாந்து மக்கள் அதை ஆமோதிக்க, இங்கிலாந்து தேசத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்மஸ் மரம் இடம்பெறத் துவங்கியது.
கிறிஸ்மஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தைக் கொண்டிருப்பது கிறிஸ்மஸ் மரத்தின் சிறப்பம்சம். அதேபோல கிறிஸ்மஸ் மரத்தின் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூய ஆவி எனும் இயேசுவின் மூன்று பரிமாணங்களைக் குறிப்பதாகவும் எனவே இயேசு மனித உருவான நாளை மரத்தை அலங்கரிப்பதன் மூலம் கொண்டாடுவது அதிக அர்த்தமுடையது என்றும் கிறிஸ்தவ விளக்கங்கள் பரிமாறப்படுகின்றன.
1747 களில் அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியாவில் ஜெர்மனியிலிருந்து குடியேறிய மக்களால் கிறிஸ்மஸ் மரம் பயன்படுத்தப்பட்டது ஆனாலும் அது பிரபலமடையவில்லை. 1830ல் அங்கு ஒரு கிறிஸ்மஸ் மரம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது, அது மக்களை வெகுவாக ஈர்த்தது. அதன் பின் சுமார் இருபது ஆண்டுகள் கடந்தபின் கிறிஸ்மஸ் மரம் ஒரு ஆலயத்தின் வெளியே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்காக வைக்கப்பட்டது. அந்த நிகழ்வு கிறிஸ்மஸ் மரம் அமெரிக்காவில் பரவ முக்கிய காரணியாயிற்று. அந்த நூற்றாண்டின் இறுதியில் பரவலாக அமெரிக்கா முழுவதும் இந்த கிறிஸ்மஸ் மரம் அறியப்பட்ட ஒன்றாகிவிட்டிருந்தது.
இங்கிலாந்தில் சுமார் நான்கடி உயரமான கிறிஸ்மஸ் மரங்களைப் பயன்படுத்துவதே வழக்கம். எல்லா விஷயங்களிலும் ஐரோப்பியர்களிடமிருந்து வித்தியாசப்பட வேண்டும் என்று விரும்பும் அமெரிக்கர்கள் தங்கள் கிறிஸ்மஸ் மரத்தை வீட்டுக் கூரை வரை உயரமுள்ளதாக ஆக்கிக் கொண்டார்கள் !
இங்கிலாந்தில் இந்த கிறிஸ்மஸ் மர விழா பரவுவதற்கு முன்பாகவே கனடாவில் அது நுழைந்துவிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கனடா மக்கள் கிறிஸ்மஸ் மரத்தை வண்ண வண்ண பொருட்களாலும், கைவினைப் பொருட்களாலும் அலங்கரித்து அழகுபார்த்தார்கள்.
பதினைந்தாம் நூற்றாண்டுகளில் டிசம்பர் இருபத்து நான்காம் நாளை ஆதாம், ஏவாள் தினமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது. விலக்கப்பட்ட மரத்தின் கனியைத் தின்றதால் பாவத்துக்குள் தள்ளப்பட்ட ஏதேன் காலத்தை நினைவுகூரும் விதமாக மரத்தை ஆப்பிள் போன்ற பழங்களால் அலங்கரித்து அந்த நாளைக் கொண்டாடி வந்தார்கள். பதொனோராம் நூற்றாண்டிலேயே இந்த வழக்கம் இருந்ததாக நம்பப்பட்டாலும், பதினைந்தாம் நூற்றண்டில் இந்த வழக்கம் இருந்தது ஆதாரபூர்வமாக அறியப்படுகிறது. இதுவே பின்னர் கிறிஸ்மஸ் மரமாக மாறியது என்று பல ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
சுமார் மூன்று கோடியே முப்பது இலட்சம் கிறிஸ்மஸ் மரங்கள் வட அமெரிக்காவில்
வருடந்தோறும் விற்கப்படுகின்றன. மூன்று இலட்சத்து முப்பதாயிரம் மரங்கள் இணையம் வழி விற்கப்படுகின்றன. கிறிஸ்மஸ் மர வளர்ப்பில் ஓரகன், வட கொரோலினா, பென்சில்வேனியா, மிச்சிகன், வாஷிங்டன் மற்றும் விஸ்கான்சின் போன்ற மாநிலங்கள் முன்னணி மாநிலங்களாக உள்ளன.
அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும், கனடாவிலும் கிறிஸ்மஸ் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. சுமார் ஒரு இலட்சம் பணியாளர்கள் கிறிஸ்மஸ் மரம் வளர்ப்பு தொழிலில் ஈடுபடுகின்றனர். பல வகையான கிறிஸ்மஸ் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. சுமார் பன்னிரண்டாயிரம் இடங்களில் நமக்குத் தேவையான மரத்தைத் தேர்வு செய்து வெட்டிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
செயற்கை மரங்களுக்கான தயாரிப்பில் கொரியா, தைவான் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகள் முன்னணியில் நிற்கின்றன. செயற்கை மரங்கள் சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்கும் தன்மை உடையவையாதலால் அதைப் பயன்படுத்தக் கூடாது என்று பல அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன.
கிறிஸ்மஸ் மரத்தைக் குறிவைத்தே கிறிஸ்மஸ் விழாக்காலத்தில் வியாபாரமும் மும்முரமாக நடக்கிறது. மரத்தை அலங்கரிப்பதற்காக என்றே தயாரிக்கப்படும் சிறப்பு மின் விளக்குகளும், மரத்தின் உச்சியில் வைக்கப்படும் நட்சத்திரமும், மரத்தில் தொங்கவிடப்படும் பொருட்களும், மரத்தைச் சுற்ற விதவிதமான வண்ணக் காகிதங்களும் என கிறிஸ்மஸ் மரம் ஒரு மிகப்பெரிய வியாபாரத் தளத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது.
கிறிஸ்மஸ் மரம் தற்போதைய நவீன யுகத்தில், மின்விளக்குகளின் வர்ண ஜாலத்தோடும், விலையுயர்ந்த அலங்காரப் பொருட்களோடும் காட்சியளிக்கிறது. அர்த்தத்தோடு கொண்டாடப்பட்டு வந்த பசுமை விழா, பின் ஒரு அடையாளத்துக்காக என உருமாறி, தற்போது அந்தஸ்தின் சின்னங்களாகிவிட்டன. அடையாளங்களை அணிந்து வாழ்வதை விட, அர்த்தத்தை அறிந்து வாழ நமக்கு வழங்கப்படுவதே விழாக்காலங்கள்.
Read more »

கார்த்தியின் சிறுத்தை



இளம் நாயகர்களில் , படிப்படியாக முன்னேறி கொண்டு வெற்றி நடை போடும் நாயகர்களில் ஒருவராக மாறி விட்டார் கார்த்தி . பருத்திவீரன்' கார்த்தி, பின்பு 'பையா' கார்த்தியானர், தற்பொழுது 'நான் மகான் அல்ல' கார்த்தியாகிவிட்டார்.  இப்படி படத்துக்கு படம் எல்லா ரசிகர்களையும் கொள்ளை கொண்டு வருகிறார் கார்த்தி . கூடுதலாக கார்த்திக்கு ரசிகைகள் அதிகம் ஆகி விட்டனர் . 


சூர்யா இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக மாறி விட்டார் . அதேபோல் கார்த்தியும் உயர்ந்து கொண்டு வருகிறார் . நிச்சயம் முன்னணி நாயகர்கள் வரிசையில் இடம் பிடிப்பார் . தன்னை தானே வளர்த்துக்கொள்வதே கார்த்தியின் சிறந்த பண்பாக கருதப்படுகிறது. இதுதான் அவரின் வெற்றியின் ரகசியம் .http://www.cinefundas.com/wp-content/uploads/2010/08/Karthi.jpg
ஸ்டூடியோ ஸ்க்ரீன் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்து வரும் படம் சிறுத்தை. கார்த்தி, தமன்னா நடிக்கும் இந்தப் படம் தெலுங்கில் தயாரான விக்ரமார்க்குடு படத்தின் ரீமேக் ஆகும். கார்த்தி முத‌ல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படமும் இதுவாகும். படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து எடுத்து வருகிறாராம் இயக்குநர் சிவா.
http://www.southdreamz.com/wp-content/uploads/2010/06/tamanna.jpg

'பருத்தி வீரன்', 'நான் மகான் அல்ல' ஆகிய படங்களின் வரிசையில் மூன்றாவதாக ஸ்டுடியோ ஸ்க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படம் 'சிறுத்தை'. இதில் முதன் முறையாக இரண்டு வேடத்தில் நடிக்கும் கார்த்தி பிக்பாக்கெட் மற்றும் படித்த இளைஞன் என இரண்டு வேடத்திலும் வித்தியாசத்தைக் காட்டி அசத்தியிருக்கிறாராம். ஒரு சாதாரண இளைஞனுக்கு அசாதாரண கடமையை முடிக்க வேண்டிய சூழலின் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதை எப்படி முடித்துக் காட்டுகிறான் என்பதே இப்படத்தின் கதை .
 http://www.behindwoods.com/tamil-movie-news-1/sep-10-01/images/karthi-siruthai-tamannah-04-09-10.jpg
"பகலில் வேட்டையாடும் ஒரே விலங்கு சிறுத்தைதான். பயமில்லாததும் எதிரியை நேருக்கு நேர் மோதுவதும் சிறுத்தைதான். அதன் வேகம் இணையில்லாதது. இப்படத்தின் நாயகனின் கதாபாத்திரமும் இதே குணம் கொண்டதுதான், அதனால்தான் இந்தப் பெயரை படத்தின் தலைப்பாக வைத்தேன்" என்று தலைப்பின் காரணத்தை கூறிய இயக்குநர் சிவா, நடிகர் பாலாவின் சகோதரர் ஆவார் . 

சிறுத்தை படத்தின் நகைச்சுவைப் பகுதிகள், ரசிகர்களின் வயிறுகளைப் புண்ணாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளதாம். இந்த படத்தில் வரும் நகைச்சுவை களைகட்டும் விதத்தில் அமைந்திருக்க, அதே சமயம் படம் முழுக்க தொடரும் சஸ்பென்ஸ் திரைக்கதையின் விறுவிறுப்பை கூட்டுமாம். முன்னணி நாயகனாக வேகமாக வளர்ந்து வரும் 'கார்த்தி', புதிய முயற்சிகளில் ஈடுபட இதுவே சரியான தருணம் என உணர்ந்துள்ளார். 
 http://www.filmmy.com/images/pai.jpeg
இப்படத்தின் சண்டைக்காட்சியில் 150 அடி உயரத்திலிருந்து குதித்து படப்பிடிப்புக் குழுவை திகைக்க வைத்தாராம். கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்றோரின் சோதனை முயற்சிகள் சில நேரங்களில் பாக்ஸ் ஆபிஸில் பலனளிக்கத் தவறினாலும், பெரும்பாலும் வெற்றியையே பெற்று தந்திருக்கிறது.

பாட்ஷா படத்தில் ரஜினி ஒரு பாடல் காட்சியில் எப்படி பல கெட்டப் போட்டாரோ அதுபோல இதில் கார்த்தி ஒரு பாடலுக்காக 9 கெட்டப் போட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சிவா 9 வேடங்களில் நடிக்கும்படி கார்த்திக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சிவாவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட கார்த்தி, அவர் விருப்பம் போல நடந்து கொள்ளத் தயாராகிவிட்டார். 

கார்த்தியின் வழக்கமான படங்களைப் போல 'சிறுத்தை' படமும் மசாலா அம்சங்கள் நிறைந்ததாக உருவாகவுள்ளது. 'சிறுத்தை'யின் எழுபது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. வேகமாக வளர்ந்து வரும் இப்படம் டிசம்பரில் வெளியாக இருக்கிறது.
 http://goob.mobi/slide/Siruthai_to_be_roar_from_December_Onwards-4c3ebc5e68891f82c696c3e6e39dedd8.jpg
கார்த்தியின் வெற்றிக்கு, சந்தோசத்துக்கு பல காரணம் உண்டு . 'நான் மகான் அல்ல' படத்தில் கார்த்தியின் நடிப்பை சிவகுமார் வெகுவாக ரசித்திருக்கிறார். கதாப்பாத்திரங்களை கவனமாக தேர்வு செய்யும்படி கார்த்திக்கு சிவக்குமார் அடிக்கடி ஆலோசனை வழங்கி வருகிறார். ஜோதிகாவும், கார்த்தியை வெகுவாக உற்சாகப்படுத்தி வருகிறார். கார்த்தியின் நகைச்சுவை உணர்வும், நடன அசைவுகளும் அவரது தாயை வெகுவாக கவர்ந்திருக்கிறதாம். நடிப்பிலும், ஒப்பனையிலும் முன்னேற்றம் காண்பது குறித்து சூர்யா ஆலோசனை வழங்கி வருகிறாராம். இப்படி கார்த்தியின் மொத்த குடும்பமும் கார்த்தி வெற்றிக்காக உழைத்து, அவரது வெற்றியால் மகிழ்ந்து, அவரது வெற்றியின் ரகசியமாக விளங்கி வருகிறது
Read more »

பிரசவ தினம்


பிரசவத்திற்கான நாள் நெருங்கிவிட்ட தன் மனைவிக்கு அருகில் துணையாக இருக்க விரும்பும் பீட்டர் [Robert Downey Jr], எதிர்பாராத சில நிகழ்வுகளால் விமானத்தில் பயணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு அட்லாண்டாவில் முடக்கப்படுகிறான். இந்நிலையில் லாஸ் ஏஞ்சலீஸ் நோக்கி காரில் பயணத்தை ஆரம்பிக்கும் ஏதன் [Zach Galifianakis], தன்னுடன் கூடவே பயணம் செய்யுமாறு பீட்டரிற்கு அழைப்பு விடுக்கிறான்….

சுயமைதுனம் செய்யும் நாயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?! இயக்குனர் Todd Phillips ஐத் தவிர வேறு எவராலும் கார் ஒன்றினுள் சுயமைதுனம் செய்யும் ஒரு நாயை இவ்வளவு அப்பாவித்தனத்தோடும், நகைச்சுவையோடும் திரைப்படுத்த இயலுமா என்பது சந்தேகமே. அவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் Due Date திரைப்படமானது நம்ப முடியாத சூழ்நிலைகளினுள் ஒருமித்து மாட்டிக் கொள்ளும் இரு அந்நியர்களின் அசாத்தியமான பயணத்தை நகைச்சுவையுடன் திரைக்கு எடுத்து வந்திருக்கிறது.

பீட்டரும், ஏதனும் முதன் முதாலக சந்தித்துக் கொள்ளும் தருணமே அபசகுனமான ஒன்றாக அமைந்து விடுகிறது. அந்தக் கணம் முதலே ஏதனை தன் முழு மனதுடனும் வெறுக்க ஆரம்பித்து விடுகிறான் பீட்டர். ஆனால் தொடரும் சம்பவங்கள் பீட்டரை ஏதனுடனும் அவன் நாயான Sonny யுடனும் ஒரே காரில் பயணிக்கும் நிர்பந்தத்திற்குள்ளாக்குகிறது.

மிக இலகுவாக கோபத்தை எட்டி விடும் இயல்புடைய பீட்டர், ஒரு சில நாட்களில் தந்தை எனும் ஸ்தானத்தை அடையப் போபவன். முதிர்ச்சியடையாத குழந்தை ஒன்றின் குணத்தையும், அறிவையும் கொண்ட ஏதன், தன் தந்தையை பறிகொடுத்துவிட்டு, ஒரு காப்பி டப்பாவினுள் அவருடைய சாம்பலுடன் பயணிப்பவன். இவர்கள் இருவரும் மேற்கொள்ளும் பயணத்தில் பீட்டர் ஏறக்குறைய ஏதனிற்கு ஒரு தற்காலிக தந்தையாகி விடுகிறான். கட்டுப்படுத்தவியாலாத பையன் ஒருவனை தன்னுடன் கொண்டு பயணிக்கும் தந்தை படக்கூடிய அவஸ்தைகளிற்கு மேலாக வேதனைகளை பீட்டர், ஏதன் வழியாக அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இதன் வழியாக தன் கோபத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளும் பீட்டர், பொறுப்பான ஒரு தந்தையின் நிலைக்கு தன்னை சீராக்கி கொள்கிறான். இதேவேளையில் தன் தந்தையின் பிரிவின் பின் யாருமே தனக்கில்லை என எண்ணி மனதினுள் உடையும் ஏதன், படிப்படியாக பீட்டரின் மனதில் ஒரு சிறிய இடத்தை தேடிக் கொள்கிறான்.

ஏதன் செய்யும் ஒவ்வொரு தகிடுதத்தமும் பீட்டரை கொலைவெறி கொள்ளத் தூண்டுகிறது. ஏதன், பீட்டரை இட்டுச் செல்லும் அசாத்திய சந்தர்ப்பங்களும், அவற்றினுள் மாட்டிக் கொண்டு பீட்டர் படும் அவஸ்தைகளும், இந்த தருணங்களை கஞ்சா உறிஞ்சும் இலகுடன் ஏதன் கடந்துவரும் பாணியும் இந்த இரு நடிகர்களினதும் நடிப்புத்திறனை திரையில் அருமையாக சிறைப்படுத்தி அசரவைக்கும் நகைச்சுவையாக மிளிரச் செய்துவிடுகிறது.

கஞ்சா விற்கும் வீட்டு சிறுவனைக் குத்துவதாகட்டும், ஏதனின் நாயின் முகத்தில் காறி உமிழ்வதாகட்டும், கொலைவெறி கொண்டு ஏதனை தாக்குவதாகட்டும், அதே ஏதன் மேல் நெகிழ்வாகி அவனை அணைப்பதாகட்டும் பரவசப்படுத்தியிருக்கிறார் நடிகர் ராபர்ட் டவ்னி ஜீனியர். அவரின் நகைச்சுவை நடிப்பும் அட்டகாசம்தான். ஏதனை நடிக்க சொல்லி பரிசோதிப்பதும், தன் மனைவிமீது சந்தேகம் கொள்ள ஆரம்பிப்பதும், வெஸ்டர்ன் யூனியன் ஊழியரிடம் மரண அடி வாங்குவதும் என [நான் என் பிள்ளை பிறந்தபோது எங்கிருந்தேன் தெரியுமா என வெஸ்டர்ன் யூனியன் ஊழியர் வினவ, மக்சில்லிஸிலா என டவுனி அடிக்கும் அந்த ஒரு சொல் டைமிங் டயலாக் அதகளம்] ஒரு சூப்பர் ஹீரோ நாயகன் எனும் நிலையிலிருந்து மிகவும் கீழிறங்கி வந்தது மட்டுமலாது, வழமையான தன் ஸ்டைலிலிருந்து அடக்கி வாசித்து தன் ரசிகர்களை வியக்க வைக்கிறார் டவுனி.

ஆனால் ஏதன் வேடமேற்றிருக்கும் நடிகரான ஸாக் கலிபையானாகிஸ், டவுனியையும் மிஞ்சி விடுகிறார் என்பதே உண்மை. இவ்வளவு இயல்பாக அவரால் எப்படி தகிடுதித்தங்களை திரையில் ஆற்ற முடிகிறது என்பது வியப்பான ஒன்று. அது அவரின் கூடப்பிறந்த இயல்பா என்று சந்தேகம் கொள்ள வைக்கும் திறன் அவரது. விமான நிலையத்தில் அவர் ரசிகர்களிற்கு அறிமுகமாகும் தருணம் முதல் கொண்டே அவரின் உடல்மொழியும், நடிப்பும் சிரிப்பு அலைகளிற்கு வலை போடுகிறது.

நடிகராக ஆகவிரும்பும் ஏதன், மார்லன் பிராண்டோ போல் காட்ஃபாதர் காட்சி ஒன்றை நடித்துக் காட்டுவதாகட்டும் [ அவர் அதை நடித்துக் காட்டி முடித்ததும் இந்த வசனங்கள் எல்லாம் நீயே எழுதியதா என சீரியஸாக ஒருவர் கேட்பார் பாருங்கள் ], பீட்டர் அருகில் தூங்குவதை சட்டை செய்யாது சுயமைதுனம் செய்வதாகட்டும், காமாண்டோ போல் மெக்ஸிகோவில் பீட்டரை மீட்பதாகட்டும் வழங்கப்பட்ட காட்சிகளில் எல்லாம் மரண அடி அடித்திருக்கிறார் அவர். அதே வேளை தன் தந்தையின் பிரிவால் வாடும்போதும், பீட்டர் தன்னை விட்டு பிரியப் போகிறான் என்பதை அறியும்போதும் நெகிழவும் வைக்கிறார். பீட்டர் காரில் தனியாக ஓட்டம் எடுத்தபின், ஒய்வெடுக்கும் இடத்தில் சூட்கேஸ் மீது அவர் அப்பாவியாக அமர்ந்திருக்கும் அந்தக் காட்சி மனதை பிசையும்.

திரைக்கதையை சலிப்பின்றி இவ்வளவு நகைச்சுவையுடன் எடுத்து வந்த இயக்குனர் டாட் பிலிப்ஸ், சந்தேகமின்றி திறமையான நகைச்சுவை திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக தன்னை மீண்டும் முன்னிறுத்தியிருக்கிறார். அவரின் சிறப்பான இயக்கத்தில் நகைச்சுவையும், மென்மையான உணர்வுகளும் நிரம்பி வெளியாகியிருக்கும் இப்படைப்பு குதூகலமான சுகப்பிரசவம். 

Read more »

காவலன் பாடல்கள் - ஒரு கண்ணோட்டம்

 

1) விண்ணைக்காப்பான் – திப்பு & ஸ்வேதா (பாடல் – பா.விஜய்)

கொஞ்சம் ஒதுங்குங்கண்ணா என்று கபிலனிடம் சொல்லிவிட்டு பா.விஜயிடம் ஒப்படைத்திருக்கிறார் ஓப்பனிங் பாடலை. நீண்ட நாட்களுக்கு பிறகு திப்பு. ஆரம்ப இசை வித்தியாசம் என்றாலும் ட்ரம்ப்பெட், என அதே கருவிகள். உற்சாகம் மேலிடுகிறது. இந்த முறை விஜயின் புகழ் பாடாமல் இறைவனை போற்றி தொடங்குகிறது
 விண்ணைக் காப்பான் ஒருவன்.. மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னை என்னை காக்கும் அவனே அவனே இறைவன்
வெறும் குத்துப்பாட்டென ஒதுக்கிவிட முடியாத பீட். வித்யாசாகரின் குத்துப்பாடல்களில் என்னைக் கவர்ந்த அம்சம் எங்கேயும் டெம்ப்போ குறையாமல் போவதுதான். கில்லியின் தொடக்கப் பாடல் ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மை ஆட வைத்துக் கொண்டேயிருக்கும். இதிலும் அப்படித்தான். ஒரு நொடி கூட நிற்காமல் ஓடுகிறது. என்னதான் இறைவனை புகழ்ந்து தொடங்கினாலும் விஜய் ரசிகர்களை குளிர்விக்க ஏதாவது சேர்க்காமல் இருப்பாரா பா.விஜய்?
ஆலால கண்டனே..ஆட்டத்துக்கு மன்னனே..ஆனந்த தாண்டவம் ஆடுவோமே
விஜயே பாடும்படி எழுதியவரிகள். கண்ணனைப் பார்த்து பாடுவது போல் வருகிறது. ஆனால் யாரை குறிக்கிறது என சொல்லவும் வேண்டுமா????????? அடுத்த பாடலுக்கு போகாமல் இங்கேயே சிக்கி தவிக்கிறது என் மனமெனும் சிடி.

2) யாரது.. யாரது – கார்த்திக் &சுசித்ரா ( யுகபாரதி)
வித்யாசாகரின் மெலடிகளுக்கு சில பிரத்யேக முகவரிகள் உண்டு. கேட்கும் முதல் நொடியிலே இதை அப்படியொரு பாடலென வகைப்படுத்தி விட முடிகிறது. இது தனுஷ் பாடல் என்றும் சொல்லலாம். கேட்ட உடனே பிடிக்க வில்லையென்றாலும் கேட்க கேட்க பிடித்து போகிறது. பித்து பிடிக்க வைக்கிறது. சுசித்ராவின் பெயர் இருந்தும் பாடவில்லையென என நினைக்காமல் பார்த்துக் கொள்கிறார் கார்த்திக். வெறும் ஹலோ, ஹம்மிங் மட்டும் சுசித்ராவுக்கு. சித்திக் இதை பார்ப்பதற்கும் இதமான ஒரு பாடலாக படமாக்கியிருப்பார் என நம்புகிறேன்
உச்சந்தலையில் அவள் வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரில் இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்
யுகபாரதி கொஞ்ச காலம் அறிவுமதியின் வீட்டில் தங்கியிருந்தாராம். இப்பவாது நம்பறீங்களா?

3) ஸ்டெப் ஸ்டெப் – பென்னி தயாள் & மேகா (விவேகா)
சில நாட்களாகவே என் காலர் ட்யூன் இந்தப் பாடல் தான். ஆனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மட்டுமே கேட்க முடிகிறது. இருந்த 4 பாடல்களில் அலைபேசி தரத்தில் கேட்ட போதே பச்சக்கென ஒட்டிக் கொண்ட பாடல். பாடியது எனது ஃபேவரிட் பென்னி தயாள். ஆரம்ப இசையை கேட்டவர்கள் யாரும் விஜய் பாடலென்றோ, வித்யாசாகர் பாடலென்றோ சொல்ல மாட்டார்கள். பேஸ், எலக்ட்ரிக் கிட்டார் எல்லாம் பொதுவாக விஜய் ஆண்டனி வசமோ, ஹாரீசின் வசமோதான் இருக்கும். கொஞ்சம் தாங்கப்பா என்று கேட்டு வாங்கியிருக்கிறார் வித்யாசாகர்.
பார்க்கதான் சிறுபுள்ள..கலக்குற பயபுள்ள..
இளம்பெண்கள் நினைப்பால நீதான் மாப்பிள்ளை
ஏமாந்த ஆளில்லை..நான் உன்னை போலில்லை.
என்ஆட்டம் பாரேண்டி யாரும் இணையில்லை
லைட்டாக தளபதி புராணம் பாடினாலும் மற்ற வரிகள் பாடலின் மெட்டுக்கும், மூடுக்கும் நச்சென பொருந்துகிறது. விவேகா கந்தசாமி டைப் பாடலிலிருந்து ஸ்டியரிங்கை இப்படி திருப்பியதற்கு கோடி நன்றிகள். இப்போதைக்கு இதுதான் என் பிக் ஆஃப் த ஆல்பம்.

4) சடசட சடசட – கார்த்திக் (பாடல்- யுகபாரதி)
இந்த மாதிரி பாடலையெல்லாம் கார்த்திக்கிடம் கொடுத்து விட்டால் பாதி வேலை முடிந்தது இசையமைப்பாளருக்கு. கடன் வாங்கிய கிட்டாரை சொன்னதை விட அதிகமாகவே பயன்படுத்திவிட்டார். பல்லவி முடிந்த பின் வரும் கிட்டார் பிட்டை கேட்டுப்பாருங்கள். இப்படியெல்லாம் நம்மால் வாசிக்க முடிந்தால் எத்தனை பேரை ஆச்சரியப்படுத்தலாம்?
கங்கைநதி வெள்ளம் சிறுசங்குக்குள்ளே சிக்கிக்கொண்டு அக்கரைக்கு செல்ல எண்ணுதே
சின்னஞ்சிறுபிள்ளை ஒரு சொப்பனத்தை வைத்துக்கொண்டு கண்ணுறக்கம் கேட்டுநிக்குதே
யுகந்தோறும் பாரதியென வாழட்டும் யுகபாரதி. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஏனோ குஷி, ப்ரியமுடன் கால விஜய் படங்கள் நினைவில் ஊசலாடி செல்கின்றன.

5) பட்டாம்பூச்சி – கே.கே. & ரீட்டா (கபிலன்)
சுமாரான வேகத்தில் ஒரு டூயட். ஹாயாக அமர்ந்து காலால் தாளம் போட்டுக் கொண்டு விஜயின் நக்கலையும், அசினின் சிணுங்கலையும் ரசித்து மகிழலாம். அதற்கு தோதாக செல்லமாய் சிணுங்கி பாடுகிறார் கே.கே. அப்படி போடு என நயாக்ராவாய் கொட்டிய குரலை அடக்கி ஆள்கிறார் வித்யாசாகர். கபிலனுக்கு பிரமோஷனா என்பது தெரியவில்லை.
அலைவரிசையில் நீ சிரிக்க.. தொலை தொடர்பினில் நான் இருக்க..
உதடும் உதடும் பேசும்பொழுது உலகை மறந்தேனே
என்ன வேலை சொன்னாலும் அதை செவ்வனே செய்வேண்ணா என்கிறார். நோ நோ இது அரசியல் இல்லை. காதல் மட்டுமே :))
விஜய் ரசிகர்களின் தேர்வு : விண்ணைக் காப்பான்
எஃப்.எம்களின் தேர்வு : பட்டாம்பூச்சி
மெலடி ரசிகர்களின் தேர்வு : யாரது யாரது
நடன ரசிகர்களின் தேர்வு :ஸ்டெப் ஸ்டெப்
விஜய் படத்தின் பாடல்கள் முழுமையாக எல்லோரையும் திருப்தி செய்து பல நாட்கள் ஆகிறது. காவலன் அக்குறையை தீர்க்க வந்தது என்பதில் சந்தேகமேயில்லை. 17 அல்லது 24 ஆம் தேதி படம் வெளிவருவது உறுதி என்று சொல்லியிருக்கிறார்கள் காத்திருக்கிறோம்ண்ணா. உங்களுக்காக பாடலின் சில பகுதிகள் தொகுத்து தந்திருக்கிறேன்.கேட்டுவிட்டு சொல்லுங்கள்.
Read more »
 
-