ஏழாம் அறிவு டிரைலர் சொல்லும் கதை என்ன?

ஏழாம் அறிவு’ படத்தின் கதைதான் என்ன என்பதை அந்தப்படத்தின் டிரைலரை
அடிப்படையாக வைத்து கண்டுபிடித்து யார் எழுதுகிறார்கள் என்பதுதான் ஃபேஸ் புக்கில் இப்போதைய ஹாட்டான விளையாட்டு!  டிரைலரை வைத்து ஆன்லைன் ரசிகர்கள் எழுதிய கதைகளில் இந்தக் கதைக்கு மதிப்பெண்களை வாரி வழங்கியிருகிறார்கள். அந்தக் கதை இதுதான்!
ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு, காஞ்சிபுறத்தில் வாழ்ந்த போதி தர்மர், அரசியல் நெருக்கடிகளால் சீனாவுக்கு நடந்தே சென்று சேர்கிறார். அங்கே அவர் மருத்துவம் பார்க்கிறார். சீனர்களுக்கு களறியை கற்றுக் கொடுக்கிறார். புத்தமத்தின் புதிய பிரிவை தொற்றுவிக்கிறார். அவரது பரம்பரையில் வந்த சர்க்கஸ் கலைஞரான  சூர்யாவை தேடிக் கண்டு பிடித்து, அறுவை சிகிச்சை மூலம் அவரது டி.என்.ஏ.வை தூண்டி விடுகிறார்கள். இதனால் அவருக்கு போதி தர்மரின் திறமைகளான போர்திறம், வீரம், தற்காப்பு பயிற்சி போன்றவை அவருக்கு நினைவிற்கு வருகின்றன.

சீன உளவுத்துறையால் ஆபரேஷன் ரெட் மூலம் இந்தியாவில் நோய்க் கிருமிகளை பரவச்செய்ய அனுப்பபடும் வில்லன் ஜானி, நோக்கு வர்மம் என்ற ஹிப்னாடிஸம் மூலம் தன் வழியில் குறுக்கிடும் ஆட்களை வசியப்படுத்தி கொண்டு ஆதாரம் இல்லாமல் செய்கிறான். அதை முறியடிக்க சூர்யாவிற்கு உதவுகிறார் இளம் விஞ்ஞானி ஸ்ருதி ஹாசன்.

வில்லன் தனது சதியை நிறைவேற்றி இந்தியாவில் இருந்து அவன் வெளியேரும் முன், அவனை அழித்து இந்தியாவைக் காப்பாற்றுகிறார். என்பது தான்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-