(படங்கள் இணைப்பு) “Airtel” யாழ்.கிளை நேற்று திறந்துவைப்பு (படங்கள் இணைப்பு)


“எயர்ரெல்’ நிறுவனம் (இன்று) அதாவது நேற்று தனது முக்கிய இலக்கை எட்டியுள்ளதாக அதன் பிரதம நிறை வேற்று அதிகாரி திருமதி அமலி நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்துக்கான “எயர் ரெல்’ தொலைபேசி வலையமைப்பு சேவை நேற்றுக்காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் எயர்ரெல் நிறு வன யாழ்.மாவட்ட அலுவலகத்தை இல.434, ஆஸ்பத்திரி வீதியில் திறந்து வைத்து உரையாற்றும் போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித் தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித் தவை வருமாறு:
எமது நிறுவனம் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங் கையில் தனது சேவையை ஆரம் பித்தது. எனினும் எமது வலைய மைப்பு இன்றுடன் (நேற்று)தனது இலக்கை எட்டியுள்ளது.
இன்றுடன் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் “எயர்ரெல்’ தொலைபேசி வலையமைப்பு விஸ் தரிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தி னராக யாழ்.மாவட்ட நீதிபதி அ. பிறேம் சங்கர் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக “எயர்ரெல்’ நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி அமலி நாணயக்கார, சந்தைப் படுத்தல் முகாமையாளர் விதுர்ரதன், ஹற்றன் நஷனல் வங்கியின் சிரேஷ்ட முகாமை யாளர் ரி.ஜெய ராஜசிங்கம், மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையா ளர் எஸ்.பத்ம நாதன், கொமர்ஷல் வங்கியின் முகாமையாளர் ஏ.ஆ. குலேந்திரன், மின்சாரசபைப் பொறியியலாளர் எஸ்.ஞானகணே சன் மற்றும் படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில்  “எயர்ரெல்’ இன் முதலாவது இணைப்பு அட்டையை யாழ்.மாவட்ட நீதிபதி அ.பிறேம் சங்கருக்கு “எயர்ரெல்’ நிறுவன பிர தம நிறைவேற்று அதிகாரி வழங்கி னார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-