ஈழத்தமிழன் காதல்கொண்டால்..


















உன் கடைக்கண் பட்டால்

என்நெஞ்சில் ஆயிரம் "ஆட்லறி" வெடிக்கிறதே

அதுவே உன் தேப்பன் பார்த்திட்டால்

"ஜெஜசுக்குறு" ஒன்று நடக்கிறதே

நீ என்னை திட்டும் ஒவ்வொரு சொல்கூட

"A.K.47"தோட்டாக்கள் போலதான் துளையிடுதே

"கிபிர்"போல் மாயமாய் வந்து மர்மமாய்ப்போகிறாய்

என்னைக் கடந்தபின்தான் அறிந்துகொண்டேன்

நீயும் எனக்கு எமன்தானென்று..


நீ என்னை வெறுக்கிறபோதெல்லாம்

"கறுப்பு யூலை" தான் ஞாபகம்

நான் தரும் காதல் கடிதங்களை கண்டு

"ஊரடங்குச்சட்டம்" போல மொளனித்திருப்பதேனடி

நீ என்ன இந்திய காடையர் படையா?

இல்லை ஸ்ரீலங்காவின் காமவெறிப் படையா?

ஈழத்தமிழரைப்போல் என்னைப் பாடாய்படுத்துவதற்கு..


கண்ணிவெடியில் அகப்பட்டவன் போல

உன்னை கண்ட பின் நானும் ஓர் ஊனம் தானடி

ஓர் பார்வையில் நீயும் உலகவல்லரசுகளும்ஒன்றுதானடி

அமெரிக்கன் போல் வெருட்டிப்பார்க்கிறாய்

சிங்களவன் போல் அடக்கியாளப்பார்க்கிறாய்

ஆனால் நானும் ஈழத்தமிழன் போல்

சளைக்காது நிற்கிறேனே ஏன், எதற்கு

கொஞ்சமேனும் யோசிச்சுப்பாரடி யென்மூதேவி


மூதேவி என திட்டியதற்கு கூட கோபமா?

என் செல்லமே, என்னைப் பிடிச்ச சனியனே

நான் என்ன செய்ய........

நீ போகும்போது தானே அழகாயிருக்கிறாய்.



-சுதேசன்-


சொற்பதங்கள்

ஆட்லறி,A.K.47 - போரில் பயன்படுத்தப்படும்ஆயுதங்கள்,

ஜெஜசுக்குறு - இலங்கையின் வடக்கே மேற்கொள்ளப்பட்டபடைநடவடிக்கை.

கிபிர் - ஒரு வகை போர் விமானம்

கறுப்பு யூலை - இலங்கையில் தமிழர்கள்மீது சிங்களவர்களால்மேற்கொள்ளப்பட் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை.


தேப்பன் - இலங்கையின் வட்டார வழக்குச்சொல்
தந்தை என பொருள் படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-