Pages

ரஜினிக்கு அர்ப்பணிக்கிறேன். தேசிய விருது பெற்ற தனுஷ் பேட்டி.

தேசிய விருது பெற்றது குறித்து நடிகர் தனுஷ் பெருமிதத்துடன் கூறியதாவது: ‘ஆடுகளம்‘ படத்தை, தேசிய விருதுக்கு அனுப்பினது தெரிந்து மகிழ்ச்சி  அடைந்தேன். விருது கிடைத்தது அறிந்து  சந்தோஷத்துக்கு அளவே இல்லை. தேசிய விருது ஜூரிகளுக்கு நன்றி. ஏனென்றால் வட இந்தியாவில் தனுஷ் என்பவனை யாருக்குமே தெரியாது. அதற்கு பிறகு அம்மா, அப்பாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். எனக்கு சேர்கிற எல்லாத்துக்கும் அவங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.

எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த அண்ணன் செல்வராகவனுக்கும் இந்த விருதில் பங்கு இருக்கிறது. முதல் நாளில் இருந்தே விருது கிடைக்கும் என்று சொல்லி வந்த என் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் நன்றி. படத்தை பெரிய அளவுல மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சாருக்கு கட்டாயம் நன்றி சொல்லணும். இந்த விருதை ரஜினி சாருக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்.

சிறந்த படம்    :    ஆதாமின்டே மகன் அபு (மலையாளம்)
சிறந்த நடிகர்    :    தனுஷ் (ஆடுகளம்), சலீம் குமார் (ஆதாமின்டே மகன் அபு)
சிறந்த இயக்குனர்    :    வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த திரைக்கதை    :    வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த நடன அமைப்பு    :    தினேஷ் (ஒத்த சொல்லால... ஆடுகளம்).
சிறந்த எடிட்டிங்    :    கிஷோர் (ஆடுகளம்)
சிறந்த பொழுதுபோக்கு படம்    :    தபங் (இந்தி)
சமூக பிரச்னை பற்றிய படம்    :    சாம்பியன்ஸ்(மராட்டி).
ஒளிப்பதிவு    :    மது அம்பாட் (ஆதாமின்டே மகன் அபு).
சிறந்த நடிகை    :    சரண்யா பொன்வண்ணன் (தென்மேற்கு பருவக்காற்று), மித்தாலி (பபு பஞ்ச் பாச்சா, மராட்டி).
சிறந்த குணசித்திர நடிகர்    :    தம்பி ராமய்யா (மைனா).
சிறந்த பாடலாசிரியர்    :    வைரமுத்து (கள்ளிக்காட்டில் பொறந்த தாயே, தென்மேற்கு பருவக்காற்று).
துணை நடிகை    :    சுகுமாரி (நம்ம கிராமம்).
தயாரிப்பு வடிவமைப்பு    :    சாபுசிரில் (எந்திரன்)
ஸ்பெஷல் எபெக்ட்ஸ்    :    ஸ்ரீனிவாஸ் மோகன் (எந்திரன்).
சிறந்த குழந்தைகள் படம்    :    ஹெச்சேகாலு (கன்னடம்).
இசைஅமைப்பாளர்    :    விஷால் பரத்வாஜ் (இஷ்க்யா), ஐசக் தாமஸ் (ஆதாமின்டே மகன் அபு).
ஜூரி  விருது         :    வ.ஐ.ச. ஜெயபாலன் (ஆடுகளம்).

கலாநிதி மாறனுக்கு விவேக் பாராட்டு

நடிகர் விவேக் கூறியதாவது: சன் பிக்சர்ஸின் ‘எந்திரன்‘, ‘ஆடுகளம்‘ படங்களுக்கு இத்தனை விருதுகள் கிடைத்திருப்பது பெருமையான விஷயம். ‘ஆடுகளம்‘ 6 விருது பெற்றிருப்பது பெருமையான விஷயம். இதில் நடித்த தனுஷ், அப்படியே மதுரை இளைஞனாக மாறியிருந்தார். மதுரை மண்ணின் வாழ்க்கையை எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் வெற்றிமாறன் இயக்கினார். அதற்கான பரிசுதான் இந்த தேசிய விருது. ஆடுகளம் ஆர்ட் பிலிம் போல தோன்றும் கமர்ஷியல் படம். இந்த கதையை படமாக்குவது பெரிய ரிஸ்க். நிறைய துணிச்சல் வேண்டும்.

ஆடுகளம் அப்படி என்றால் ‘எந்திரன்’ அப்படியே தலைகீழ். அந்த பிரமாண்டம் இந்தியாவே இதுவரை பார்க்காதது. இத்தனை கோடிகளை கொட்டி படமெடுக்க மகா துணிச்சல் வேண்டும். இப்படி முற்றிலும் வெவ்வேறான கதைக்களத்தை சேர்ந்த இரண்டு படங்களையும் கொடுத்து தமிழுக்கு 8 தேசிய விருதுகள் கிடைக்க காரணமான கலாநிதி மாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எந்திரனுக்காக ரொம்பவும் உழைத்த ரஜினிக்கும்  ஒரு விருது கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

என் அம்மா கனவு நனவாகி இருக்கிறது

வெற்றிமாறன் கூறியது: இந்த விருதை எதிர்பார்க்கவில்லை. என் அம்மா மேகலா எப்போதும் நான் டெல்லியில் விருது வாங்க வேண்டும் என்று சொல்பவர். அவர் கனவு நனவாகியிருக்கிறது. ஷூட்டிங் முழுக்க மதுரையில் நடந்தது. மனைவிக்கு குழந்தை பிறந்தபோதுகூட சென்று பார்க்க முடியவில்லை. அந்த வேதனைகளை தாங்கிகிட்ட மனைவிக்கு நன்றி. இது வழக்கமான படம் இல்லை. ஆனாலும் என் மேல நம்பிக்கை வச்சு, முழு ஆதரவு கொடுத்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். படத்தை மாஸ் கிட்ட கொண்டு சேர்த்தது அவர்தான்.

ஒளியேற்றியது மைனா

தம்பி ராமய்யா கூறியது: ‘சினிமாவில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்த எனக்கு ‘மைனா‘ ஒளியேற்றி வைத்தது. இயக்குனர் பிரபு சாலமனுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். மேலும் நன்றாக நடிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை இந்த விருது தந்திருக்கிறது. வயது முதிர்ந்த எனது தாய்க்கும், ஒரு வெற்றி பெற மாட்டாரா என ஏங்கிய என் மனைவிக்கும் இந்த விருது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அவர்கள் சந்தோஷம்தான் எனது சந்தோஷமும்’

எதிர்பாராத விருது இது

சரண்யா கூறுகிறார்: ‘தென்மேற்கு பருவக்காற்று‘ படத்தை பார்த்துவிட்டு எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று முதலில் சொன்னது மீடியாதான். அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது எதிர்பார்க்காத விருது. என்னை நம்பி இப்படியொரு கேரக்டரை கொடுத்த இயக்குனர் சீனு ராமசாமிக்கு நன்றி.

மக்களின் வாழ்க்கையை அப்படியே எடுத்ததற்கு கிடைத்த வெற்றி

இயக்குனர் சீனு ராமசாமி கூறியது: ‘தென்மேற்கு பருவக்காற்று‘ ஒரு நிலத்தின் கதை. சரியான நில பின்னணியோடு அந்த மக்களின் வாழ்க்கையை எந்தவித சமரசமும் இல்லாமல் நேர்மையாக பதிவு செய்ததற்காக கிடைத்த பரிசாக இதை கருதுகிறேன். என்னை சிறு இயக்குனர் என்று நினைக்காமல் தாய் கேரக்டரை உள்வாங்கி நடித்த சரண்யா, படத்தை முதலில் பார்த்து கண்ணீர்விட்டு பாடல் எழுதிய வைரமுத்து, துணிச்சலோடு தயாரித்த சிபு ஜசக் ஆகியோர்தான் இந்த விருதுக்கு காரணம்.

6-வது முறையாக விருது பெறும் வைரமுத்து

தேசிய விருதை 6-முறையாக, கவிஞர் வைரமுத்து வாங்குகிறார். முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களுக்காக தேசிய விருது பெற்றிருந்தார். அவர் கூறியது: பொதுவாக நான் பாட்டு எழுதிய பிறகுதான் படம் எடுப்பார்கள். ஆனால், ‘தென்மேற்கு பருவக்காற்று‘ படத்தில் தற்போது தேசிய விருது கிடைத்திருக்கும் ‘கள்ளிக்காட்டில் பொறந்த தாயே‘ பாடல் படம் எடுத்த பிறகு எழுதிய பாடல். இதுவரை நடுத்தர மற்றும் மேட்டுக்குடி தாய்களை பற்றிய பாடல்களே திரைப்படத்தில் வந்திருக்கிறது. முதன் முறையாக உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த, புழுதி மண்ணை சேர்ந்த ஒரு தாயின் பாடலாக இது எழுதப்பட்டது. தான் படிக்காமல் உழைத்து தன் பிள்ளைகளை படிக்க வைத்த, படிக்க வைத்துக் கொண்டிருக்கிற தாய்மார்களுக்கு இந்த விருதை சமர்ப்பணம் செய்கிறேன்

பொலிஸாகவும் தாதாவாகவும் வரும் அஜித்

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் படம் மங்காத்தா.
இது அஜித் நடிக்கும் ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இவர்களுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், லட்சுமி ராய், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சென்னை, மும்பை, ஹைதராபாத் என பறந்து பறந்து இப்படத்தின் சூட்டிங்கை முடித்து வருகிறார்கள். சூதாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அஜித் நடிக்கும் வேடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
நெருங்கிய திரைப்பட வட்டாரங்களில் விசாரித்த வரை, அஜித் பொலிஸ் அதிகாரியாகவும், தாதாவாகவும் மாறி மாறி வருகிறார் என்றனர். த்ரிஷா இப்படத்தில் முதல் முறையாக சென்னை வாழ் சேரிப்பெண்ணாக நடிக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால், சென்னைத் தமிழை தனது சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் வழக்கம் போல் பொலிஸ் அதிகாரியாக அஜித்தை பிடிக்க வருகிறார். இவருக்கு ஜோடியாக லட்சுமிராய் நடிக்கிறாராம். கொமெடிக்கு பிரேம்ஜி அமரன் நடித்திருக்கிறாராம். மங்காத்தா படத்தில் ஒரு பாடல் நேற்று தான் வெளியாகியுள்ளது.

கார்த்தி நடிக்கும் சகுனி திரைப்படம்

தமிழ் தாய் வாழ்த்தெல்லாம் பாடதீங்கப்பா. 'நீரா'ரும் கடலுடுத்த.... என்று பாடினால் Karthiஅதுலயும் நீரா(ராடியா) வருகிறதே என்றெல்லாம் கவலைப்படுகிற நிலைமைக்கு ஆளானார்கள் சில அரசியல் புள்ளிகள். அந்தளவுக்கு நீராராடியா என்ற அரசியல் தரகரின் புகழ் நாடெங்கிலும் ஒலித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில்...
ஆனால் அவரது கதையையே சினிமாவாக எடுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அதிலும் முன்னணி நடிகரான கார்த்தி நடிக்கிறார் என்பது எவ்வளவு சுவாரஸ்யம்! இவர் நடிக்கும் சகுனி படத்தின் கதை அப்படியே நீராராடியாவின் கதைதானாம். ஆனால் இந்த கதையை பொறுத்தவரை கார்த்தி ஒரு ஆண் நீராராடியா!
ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளுக்கு இடையே 'மூட்டிவிட்டே' வளரும் ஹீரோ ஒரு கட்டத்தில் அரசியல் சதுரங்கத்தில் மிக முக்கியமான ஆளாக உயர்வது போல அமைக்கப்பட்டிருக்கிறது திரைக்கதை. இதில் காட்சிக்கு காட்சி நீராராடியாவின் ரிசம்ளன்ஸ் அதிகம் என்கிறார்கள் இந்த படத்தின் வளர்ச்சியை அருகிலிருந்து கவனிக்கும் சில முக்கியஸ்தர்கள்.
பொதுவாகவே அரசியல் தொடர்பான கதையில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் அஞ்சுவார்கள். ஆனால் கதை கேட்டபின் உற்சாக துள்ளலோடு நடிக்க ஒப்புக் கொண்டாராம் கார்த்தி.
ஆட்சி மாறாம இருந்திருந்தா தெரிஞ்சுருக்கும் சேதி...!

Folder க்கு Password


எந்த மென்பொருளும் இல்லாமல் Folder க்கு Password கொடுப்பது எப்படி..?
எந்தமென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது Windows Xp system இல் முடியும். இதற்கு உங்கள் Hard disk  NTFS முறையில் Format செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இனி எந்த போல்டரை உங்களுடையதாக மட்டும் ஆக்கிட வேண்டுமோ அதில் ரைட் கிளிக் செய்து Properties கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் Windows sharing என்ற Tab ஐக் click செய்தால் “Make this folder private” என்ற பெட்டி தெரியும். இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
பின் Apply என்ற பட்டனை அழுத்தவும். உங்களுடைய கம்ப்யூட்டர் அக்கவுண்டிற்கு தனியாக Password இல்லை என்றால் கம்ப்யூட்டர் உங்களிடம் இந்த Folder க்கு Password கேட்கும்.

Password கொடுத்து உறுதி செய்தபின் “Create Password” என்ற பட்டனை அழுத்தி பின் Password விண்டோவினை மூடவும்.
பின் Properties Dialog Box இல் OK அழுத்தி மூடவும். இனி Password தராமல், நீங்கள் உட்பட, இந்த Folder க்குள் நுழைய முடியாது. எனவே, நீங்களும் இந்த Password ஐ சரியாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக் வழங்குகிறது புதிய ‘Send’ பட்டன்


Facebook


பொதுவாக  செய்திகளை  அனைவருடனும் பகிர்ந்து கொள்ள உதவுவது பேஸ்புக் இணையதளம். ஆனால் இப்பொழுது செய்திகளை தன் நண்பர்களுடன்  மட்டும் பகிர்ந்து கொள்ள பேஸ்புக் புதிய ‘send’ பட்டன் ‘ஐ அறிமுக படுத்தியுள்ளது.
  • இந்த  ‘send’ பட்டன்  பழைய  ‘email to a friend’ பட்டன்’க்கு பதிலாக செயல்படும்.
  • இந்த பட்டன் நண்பர்களுடன் செய்திகளை பகிர்ந்துகொள்ள உதவுகிறது.
  • 50′க்கும் மேற்பட்ட இணையதளங்கள் இந்த ‘send’ பட்டன்’ஐ  உபயோகிக்க தயாராக உள்ளன.
பேஸ்புக் இந்த வசதியை கடந்த திங்களன்று அறிமுகபடுத்தியது . இது ‘email to a friend’ பட்டன் ‘க்கு பதிலாக செயல்படும். இந்த ‘send’ பட்டன் பார்பதற்கு ‘Like’ பட்டன் ‘ஐ போலவே இருக்கும். இதை கிளிக் செய்தவுடன் அந்த பக்கத்தை நீங்கள் யாருக்கு அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களுடைய  ‘inbox’க்கு அனுப்பலாம்.
Gilt Groupe,             1-800-Flowers      , The Wall street Journal, Orbitz, Last.fm, The Huffington post, People.com, The Washington Post உள்ளிட்ட 50′க்கும் மேற்பட்ட இணையதளங்கள் இந்த  வசதியா உபயோகிக்க உள்ளன.
இந்த  ‘send’ பட்டன்  Facebook developer site ‘இல்   கிடைக்கும் யார் வேண்டுமானாலும் இதனை சுலபமாக தங்கள் இணையதளங்களில் சேர்த்து தங்கள்  பக்கத்தை வாடிக்கையாளர்கள் அவர்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும்.
இந்த ‘send’ பட்டன் நண்பர்களுடன் செய்திகளை பகிர்ந்து கொள்ள மிகவும் எளிமையான முறையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உயிர் உள்ள சடலங்கள்


          
ழைச் சாரலின் நடுவில் மரணத்தின் ஓலம்
கால்கள் இரண்டும் பல மிளந்து
முள்ளந்தண்டில் மின்பாய

மழைச் சாரலின் நடுவில்
மரணத்தின் ஓலம்

காது இரண்டும் செவிடுபட
சத்தங்கள் சித்தத்தை வதைக்கின்றன
சேதி கேக்க வாய்ப்பு இல்லை
சேதத்தின் தன்மை தெரியவில்லை
வேதங்கள் ஓதி விடியல் நோக்க
விடியலும் விரக்தியில் விம்முகிறது

சந்தனக் கட்டையில் பல்லுத் துலக்குவது
பரம்பரை வழக்கம்
சந்தனத்தை உரசி நெற்றியில் இடுவது
பாரம்பரிய விளக்கம்
தூய இருள் - அதற்கு துறவு கோல் ஒளி
துன்பச் சிறை - அதற்கு துறவு கோல் - எந்த வழி


சொந்த மண் தீயின் நாக்கில்
வெந்து தீய்கிறது
வந்த மண் வந்தாரை மீண்டும்
வழி அனுப்புகிறது
எந்த மண்ணை நாங்கள் சுவாசிப்போம்

மழைச்சாரலின் நடுவில் மரண ஓலம்

வேட்டுச் சத்தங்கள் வானைப் பிளக்க 
ஓய்ந்தது அந்த ஓலம் - பாசையும் இல்லை
நாட்டின் நலம் கருதி வீட்டின் சாரலில்
விழுந்தது மழை பெருத்த ஓசையில்
காற்று கதறியது இடியோ அதறியது
விண்ணில் இருந்து மண்ணை நோக்கி
பளிச் பளிச் என்று முத்தமிட்டன – அது மின்னல்

நாட்கள் எண்ணினோம் நாங்கள்
ஒளிந்த தலைகள் மீண்டும் வெளியில் தோன்றின
சேதியேதும் புரியவில்லை ஆனால் - ஓலத்தின்
ஓசை ஒழிந்ததற்கு அர்த்தம் புரிந்தது

அணைகளை தாண்டி வெள்ளம் விரைந்தோட அந்த
வெள்ளத்தின் மேல் செத்த உடல்கள் உருண் டோடியது
சோவென்று புயலும் அவற்றை விரட்டிச் சென்றது

விறைத்த உடலுடன் விம்மாத மனதுடன் விழித்தது 
கண்களில் கண்ணீர் இல்லை
மிதந்த சடலங்களை விரைந்து எடுக்கவில்லை
விலகாமல் நின்ற நாமும் உயிர் உள்ள சடலங்கள்தான்.

உஸாமாவின் மரணமும் பின்னைய போராட்டமும்

உஸாமாவின் மரணம்(?) தொடர்பாக 
கைபர் தளம் விடுக்கும் செய்தி
உஸாமா மரணித்து விட்டார் என அமெரிக்க நாய்கள் மட்டுமே உளையிடுகின்றன.
ஸாமா பின் லேடனின் மரணம் ஒபாமாவால் அறிவிக்கப்பட்ட நொடியில் இருந்து முஸ்லிம்களின் மனதில் இனம் புரியாத கவலையும் தோல்வி மனப்பான்மையும் முஸ்லிம்களிற்கு எதிரான உணர்வு கொண்டவர்கள் மனதில் அதீதமான வெற்றி மனப்பான்மையையும் விரவியிருப்பதை மிக நன்றாகவே அவதானிக்க முடிகிறது. இதற்கு அமெரிக்க இஸ்ரேலிய வீதிகளும் பாகிஸ்தானிய ஈராக்கிய வீதிகளும் நல்ல உதாரணங்கள். ஒரு புரம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தவாறு பியர் போத்தல்களை உலுக்கி கொக்கரிக்கும் மக்கள். மறுபுரம் வெள்ளைகொடிகள் கட்டப்பட்டு சோகமயமாக காட்சி தரும் மக்கள்.


இந்த இரண்டு மனோபாவமுமே மிகத் தவறானவை. புனித ஜிஹாத் தனி மனித ஹீரோ இஸத்தில் தங்கியுள்ள ஒரு விடயமல்ல. ஜிஹாதை மேற்கொண்டதால் ஹீரோஆனவர்கள் உண்டே அன்றி ஹீரோக்களால் ஜிஹாத் நிலை நிறுத்தப்படவில்லை. ஒரு தனி மனிதனின் மரணம் ஜிஹாதில் எந்த ஒரு வெற்றிடத்தையும் ஏற்படுத்தாதுஇதுவே ஒரு அஜமியால் மேற்கொள்ள பட்டிருந்தால் இந்த பேரும் புகழும் அதீத கீர்த்தியும் அங்கீகாரமும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.


உஸாமா யார்? அவருடைய அரசியல் இராணுவ போக்கு என்ன? அவரிற்கான பின்னணி என்ன? அவர் எதை சாதித்தார்? யாரால் கொல்லப்பட்டார்? எப்படி கொல்லப்பட்டார்? உண்மையில் கொல்லப்பட்டாரா? போன்ற கேள்விகளிற்கு விடைகளை தேடுவதில் எந்த பலனுமில்லை.


அவர் உண்மையான முஜாஹிதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் சஹாதத் எனும் உன்னதமான ஸ்தானத்தை அடைவார். அவ்வளவுதான். உஸாமா போராடியது உண்மையானால். அல்லாஹ் கூறிய அடிப்படையில் போராடியது உண்மையானால் உஸாமா மரணித்தது உண்மையானால். அமெரிக்கா அவரிற்கு நன்மையே செய்துள்ளது. உஸாமாவின் சொர்க்கத்திற்கான வாசலை அமெரிக்கா திறந்து விட்டுள்ளது. அவ்வளவே. ஒரு முஜாஹிதின் மரணத்திற்காக பிரார்த்தனை புரிவதில் எந்த தப்பும் கிடையாது.


அல் ஜிஹாத் மனிதர்களை இயக்கியதே வரலாறு. மனிதர்கள் ஜிஹாதை ஒரு போதும் இயக்க முடியாது. உஸாமாவின் மரணத்தில் அமெரிக்காவும் மேற்குலகும் மட்டுமா சந்தோசப்படுகிறது. இந்த மரணம் ஹிஸ்புத் தஹ்ரீரிற்கும் சந்தோசம் தரும் ஒரு செய்தியே.


இவரின் மரணம் ஒரு வகையில் உலகலாவிய ஜிஹாதிற்கான வாயலை திறந்து விட்டிருக்கிறது என்பதே உண்மை. அவரின் உள்ளத்தை அல்லாஹ்தான் அறிவான். கூலி வழங்குவதில் அல்லாஹ் மிக நீதமானவன்.


முஸ்லிம்களிற்கு எதிரான உலகளாவிய அநியாயங்களிற்கு அடிப்படை சக்திகளான அமெரிக்க மற்றும் ஸியோனிஸத்திற்கு இது ஒரு மகத்தான வெற்றியல்ல என்பது தெளிவாகத் தெரியும். இப்போது இவர்கள் செய்வது ஒரு உளவியல் யுத்தம். 


இஸ்ரேலிய இராணுவ தளபதி சொன்ன வார்த்தைகளே உண்மையானவை. "உஸாமா பின் லேடனின் மரணம் என்னுள் பெரிதாக ஒரு நிம்மதியை என் இதயத்தில் கொண்டு வரவில்லை. நான் முதலாவது பூரித்தது யெஹியா அய்யாஸின் மரணச் செய்தி கேட்டு. இரண்டாவது பூரித்தது அஹ்மட் யாஸினின் மரணச் செய்தி கேட்டு. அரபாத்தின் மரணமோ அல்லது உஸாமாவின் மரணமோ என் வீட்டு பூனை, குட்டி இறந்ததை விட பெரிய விடயமல்".