கிறிஸ் பூதம் தமிழர்களே - மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயற்சி!

இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய பாதுகாப்புத் தரப்பினரால் கர்ச்சிதமாக நடாத்தப்படும் நிகழ்வாக கருதப்படுவது கிறிஸ் பூதம் எனப்படும் மர்மமனிதன் விவகாரமாகும். ஶ்ரீலங்காவின் சிங்களப் பகுதியில் ஒத்திகை பார்க்கப்பட்டு தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் உளவியல் யுத்தத்தினை மிகவும் தந்திரமான முறையில் இலங்கை அரசாங்கம் செவ்வனே நடாத்தி வருகின்றது, இதனை நடத்துபவர்கள் இலங்கை படையணியினர் தான் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், அரசாங்கமும் அதன் அடிவருடிகளும் மறுத்தே வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாக சர்வதேச குற்ற விசாரணைக்கு ஶ்ரீலங்கா முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய பாதக நிலை தோன்றியுள்ளதால் தமிழர்களை வ்ருத்திக் கொண்டிருக்கும் மர்ம மனிதன் விவகாரத்துக்கும் முற்றுப்புள்ளை வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழர்கள் மீது உளவியல் யுத்தத்தினை அரசாங்கம் திட்டமிட்டு நடத்திய போதிலும், இதற்கான பழியினை தமிழர்களின் மீதே போடுவதற்கு தேவையான வழி முறைகளைத் தேடிய படைதரப்புக்கு விடை கிடைத்துள்ளது.

2011.09,17 ஆம் திகதி சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியைச் சேர்ந்த சைக்கிள் திருத்தும் கடையை நடாத்தி வரும் இராமையா காண்டீபன் எனும் 26 வயதுடைய இளைஞன் கல்வயல் பகுதியிலுள்ள 11 ஆம் இராணுவ படைத் தளத்துக்குப் பின்புறமாகவுள்ள அடர்ந்த பற்றைக் காட்டுக்குள் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒளிந்திருந்ததாகவும், கைது செய்யச் சென்ற போது, அந்நபர் இராணுவ முகாமை நோக்கி ஓடியதாகவும், ஆகவே இவர் தான் மர்ம மனிதன் எனவும் பொலிஸாரை ஆதாரம் காட்டி பலாலி படைத் தலைமையக ஊடகப் பிரிவினர் சாவகச்சேரியில் நடாத்திய ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் எனும் பெயரில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பீதியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சில சமூக விரோதிகளும் ஆங்காங்கே தங்களது வக்கிர நோக்கங்களை நிவர்த்தி செய்ய முற்பட்ட சம்பவங்களும் நடைபெற்ற போதிலும், அரசாங்கத்தின் துணை கொண்டு ஏவப்பட்ட மர்ம மனிதனை கண்டு பிடிக்க யாருமற்ற சூழ்நிலை இருப்பதனால், இதனை தமிழர்களே செய்வதாக உலகுக்குக் காட்ட அரசாங்கம் எடுத்துள்ள முயற்சியின் புது வடிவமே இதுவாகும்.

இராணுவ தரப்பினரால் இச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை அனைத்தும் அந்தந்த பகுதியில் வாழும் தமிழர்களாலே ஏற்படுத்தப்படுகின்றது, எனக் காரணங்காட்டி காலப் போக்கில் இன்னும் பல தமிழ் இளைஞர்கள் இராணுவ தரப்பினரால் கிறிஸ்பூதம் அல்லது மர்மமனிதனென அடையாளப்படுத்தப்படலாம், இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள் தமிழ் இளைஞர்கள் ஆகும்.
Read more »

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ..

மணமாகாத ஆண்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு...உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறது எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.)முதலில் இந்த அட்டவணையை அவதானிக்க...




தொகுதி 1


A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98


மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக்குறிக்க.கூட்ட வேண்டாம்...(உதாரணமாக...Kannan - 60 20 46 46 20 46 )


பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள்.

 
பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் வகுக்குக.

பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக.உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள்.100 சதவீதம் உண்மையானது...


A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22 J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24 S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-49

 நானும்  சோதித்துப் பார்த்தேன்.அப்படியே ஷாக் ஆயிட்டன்.

Read more »

மரணதண்டனை எதிர்ப்போம்,மனித நேயம் காப்போம்.

 
மன்னிப்பிலும் வலிய தண்டனை வேறேதும் இல்லை என்பது என் ஆணித்தரமான கருத்து.ஒருவன் தன் குற்றவாளியை முழுமனதாய் மன்னிக்கும் போதே அக்குற்றவாளி ஆனவனுக்கு தன் குற்றத்தை உணர்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.மாற்றாக அவனைத் தண்டிக்கும் போது,குற்றவாளி முதலில் குற்றம் செய்கின்றான்,தண்டிப்பவன் இரண்டாவதாய்க் குற்றம் செய்கின்றான்.மொத்தத்தில் இருவருமே நீயாயவாதிகள் இல்லை.

தங்களை நீதிமான்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு,மற்றவர்களைத் தண்டிக்க முண்டியடித்துக் கொண்டிருப்பவர்களின் அக்கிரமங்கள்,இன்னும் வெளியுலகத்திற்குத் தெரியவில்லை.அவ்வளவுதான்.இவ்வுலகத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளுக்குள் இருப்பவர்களை விடக் கொடூரமான குற்றவாளிகள் அதிகாரம் என்ற போர்வையையும்,பண பலம் என்ற முகமூடியையும் அணிந்து கொண்டு வெளியில் இருந்து நியாயம் விசாரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.அது தான் இந்த உலகத்தில் நீதி.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரண்டு வகை.ஒன்று தூண்டுதலின் பேரிலோ,நேரிடையாகவோ குற்றம் செய்தவன்,மற்றையது அவனது காலக் கொடுமையில் அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டவன்.இவர்கள் இருவரையும் வேறு பிரிப்பது என்பது அசாத்தியமானது.ஏனெனில் தீர்ப்பு வழங்கப்படுவது முன் வைக்கப்படும் சாட்சியங்களிலும்,வக்கீலின் வாதத்திலுமே.இதைத்தான் அண்ணா அழகாகச் சொன்னார்,சட்டம் ஒரு இருட்டறை,அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்குஎன்று.ஆனால் இங்கு பெரும்பாலும் பணத்திற்காக வாதாடுபவர்களே வக்கீல்கள்.சாட்சியங்கள் என்பது அதிகாரத்தில் உள்ளவர்களின் கைவினைப் பொருள்.மொத்தத்தில் நீதி என்பது போலியாய் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் தராசுதான்.

இன்று தமிழ் நெஞ்சங்களில் புயலாய் வீசிக்கொண்டிருக்கும் சம்பவம்,முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோரின் தூக்குவிவகாரம்.21 ஆண்டுகளாக கேள்விக்குறியுடன் இருக்கும் மர்மத்துக்கு இவர்களின் தூக்கின் மூலம் விடைகாண முயல்கின்றார்கள். 21 ஆண்டுகள் வெளியுலகத் தொடர்பின்றி, தங்கள் இளமையைத் தொலைத்து, மனதளவில் இறந்தவர்களின் உயிரைப் பறிப்பதன் மூலம் இவர்கள் அடைந்துவிடப்போகும் வெற்றிதான் என்ன??
உண்மையில் குற்றம் செய்தவன் என்றால்,தன் பாவத்தின் சம்பளமாக மரணத்தை எண்ணி மகிழ்வாய் இந்தப் பூமியில் இருந்து விடைபெறுவான்,ஏனெனில் மனிதனின் தண்டனையைப் பார்க்கிலும் அவனின் மனச் சாட்சியின் தண்டனை மகாகொடியது.ஆனால் அநியாயதிற்கு பழி சுமத்தப் பட்டவனோ தன் நியாயத்தை வெளிப்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் அல்லவா விடைபெறப்போகிறான்.
ஒருவன் குற்றவாளியோ அல்லது நிரபராதியோ,ஆனால் அவனுக்கு வழங்கப் படும் மரணதண்டனையானது,அவனுக்கு வழங்கப் பட்ட தண்டனையல்ல.ஏனெனில் அவன்தான் அதை அனுபவிப்பதற்கு இவ்வுலகில் இல்லையே.மொத்தத்தில் அந்தத் தண்டனையை அனுபவிக்கப் போவது அவனை நேசித்த உறவுகளே.

மரணதண்டனை எதிர்ப்போம்,மனித நேயம் காப்போம்.
Read more »

பிரபஞ்ச நியதிகள் – காதல்


உலகில் எல்லா உயிர்களையும், அறிவு பேதமின்றி வளைத்துப்போட்ட எல்லை காதல். ஆதாம் ஏவாளில் ஆரம்பித்து இன்று என்னை உங்களை இன்ன பிற இதயங்களை உயிர்பிக்க அல்லது உயிரறுக்க உற்ற தோழனாய் இருப்பது காதலே. சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சி, சாணக்கியர்களின் தோல்வி, கண்டங்களின் தோற்றம், துரியோதனனின் மரணம் முதல் தற்கொலைகள் கொலைகள் வரை காதல் வியாபித்துவிட்டது. தமிழனின் காதல் ஜாதிகளைத்தாண்டி வருகிறது ஜாதிகளால் பிரிக்கப்படுகிறது. வெள்ளையனின் காதல் காரணத்தால் வருகிறது காரணமின்றிப் பிரிகிறது. நியூட்டனின் மூன்றாம் விதி தோற்கும் இடமும் காதல்தான், நீ ஆழமாக ஆராதிக்கும் பெண் உன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் போகலாம், நீ கண்ணெடுத்தும் பாராத பெண், உன்னை கண்கண்ட தெய்வமாக மதிக்கலாம். ஐயா நியூட்டன் அவர்களே இப்போதுமா சொல்கிறீர்கள் “உலகில் எல்லா தாக்கங்களுக்கும் சமனானதும் எதிரானதும்………??
இந்தப் பதிவு சுயநலக் காதல்களையும், ‘நிச்சயிக்கப்பட்ட’ காதல்களையும் (அந்தஸ்து, ஜாதி, மதம் பார்த்து ‘மேற்கொள்ளப்படும்’ காதல்கள்) தவிர்த்துவிடுகிறது. எல்லாக் காதல்களும் ஜெயிக்காமல் போவதற்கு ஒரே காரணம் காதல் வரையறுக்கப்படாதது மட்டுமல்ல காதல் சூழ்நிலைக் கைதியும் கூட. கைமாறும் தாம்பூலத் தட்டுக்கள் எத்தனை இதயங்களின் கல்லறைக்கான அத்திவாரங்கள்? பெற்றோர்களின் தற்கொலை நாடகங்களில் எத்தனை காதல்கள் பாத்திரம் இழந்து போயின? எதோ உந்துதல் என்னை பதியத் தூண்டிவிட்டது அனால் சொல்லெனாத் துயரங்கள் எதை சொல்வது எதை விடுவது என்று சிந்திக்க வைக்கிறது.
இப்படி வரவேண்டும் காதல் அப்படித்தான் வரவேண்டும் காதல் என்று அறிவு ஜீவிகள் சொல்வார்கள் காதலுக்கு கண்ணே இல்லை இதில் மூளை எங்கனம்? சட்டென்று வருவாள், உடல் எடை குறைவது போல ஒரு சொர்ப்பணம், இதயம் லேசாகி உடலை விட்டு நீங்குவது போல ஒரு பிரமை, இவளின்றி எவ்வண்ணம் அமையப் போகிறது என் உலகு என்ற பயம், மூளையின் அதிகாரம் இன்றி இயங்கும் உடல் உறுப்புகள், அளவுக்கு அதிகமான சிரிப்பு, தேவையற்ற கோபம், தனிமையில் இனிமை, இளையரஜாவில் நாட்டம், அதிகரித்த கவித்துவம், ஆரவாரமான தத்துவங்கள், உனக்குள் உதிக்கும் புதுமைப் பித்தன், வழமைகளில் உள்ள பழமைகள் மேல் வெறுப்பு இவை காதல் வரும் போது தோன்றும் சில அறிகுறிகள். இது இல்லாமல் காதல் வந்த பலரும் இருக்கலாம் இவற்றுடன் சேர்த்து இன்னும் பல அறிகுறிகளுடனும் காதல் வரலாம்; நான் முன்னரே சொன்னது போல; காதல் வரையறை அற்றது.
காதலுக்கு இதயம் சின்னமென்பது சரிதான். விஞ்ஞானமே சொல்கிறது ஒருவர் 80 வயது வாழ்ந்தால் அவரின் இதயம் 40 வருடங்கள் ஓய்வெடுத்திருக்கிறது. இருப்பது போலும் இல்லாது போலும் இருப்பதில் காதலுக்கு நிகர் எவருமில்லை. இதயம் சரிதானே? எதோ ஒரு தருணத்தில் யாரோ யாராலோ காதலிக்கப்பட்டிருக்கிறார்கள், ஏற்கப்படாத இதயம் என்று இங்கு எதுவுமே இல்லை, ஆனால் ஏற்கப்பட்டும் பொருத்தமில்லாத சந்தர்ப்பங்கள் ஏராளம் இருந்திருக்கலாம்.
எனது பார்வையில் காதல் பின்வருவனவற்றை வெறுக்கிறது (இது ஆண்பால் சார்ந்ததெனினும்) நேசித்த நெஞ்சம் நேசிக்க மறுத்தபோதும் நேசித்தவளின் வீழ்ச்சி, அவள் கணவனின் மரணம், அவள் உறவுகளின் பிரிவு, நம்மால் அவள் மேல் ஏற்படும் தேவையற்ற அழுத்தம், அவள் சந்திக்கும் விபத்துக்கள், அவளின் கண்ணீர், அவளின் ஏமாற்றங்கள், அவளின், அவளின், அவளின்………….
நீங்கள் காதலித்திருந்தால் உங்கள் அவர்கள் உங்களை ஏற்க மறுத்திருந்தாலும் (இதுவும் ஆண்பால் சார்ந்ததெனினும்) நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் கீழுள்ள எதோ ஒன்றையேனும் நீங்கள் நேசித்திருப்பீர்களே? அவளின் குழந்தை, அவளுக்கு வாய்த்த ஆடம்பர வாழ்க்கை, அன்பான கணவன், அவளின் வெற்றிகள், அவளின், அவளின், அவளின் …………………….
இதை எழுதுவதற்கு எனக்கிருக்கும் அனுபவம், வயது என்பன பற்றி நிறைய கேள்விகள் எழலாம். என்னுள் பருவ மற்றம் ஏற்படத் தொடங்கிய 2001 தொடக்கம் இன்று இரவு 11.07 வரை நிறைய பார்த்துவிட்டேன், சொந்த அனுபவங்கள் இருக்கின்றன; அளவில் குறைவு, நண்பர்களின் உறவுகளின் ஆயிரம் ஆயிரம் கதைகள், நாம் தமிழராய் இருப்பதால் அளவுக்கதிகமாக வேரறுக்கப்பட்ட கதைகள் சில வேரூன்றிய கதைகள்; வேரூன்றியும் நீரற்று மடிந்த கதைகள், விருட்சமாகியும் வெட்டிச் சாய்க்கப்பட்ட கதைகள், யாதார்த்தம் தந்த பிரிவுகள், சொல்லிய காதல்கள், சொல்ல மறந்த காதல்கள் இன்னும் பல இந்த வரையறைக்கு அப்பாற்பட்ட காதல்கள் எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது. சோகம் என்னவெனில் இணைந்த கரங்கள் ஏதும் இமயம் போல் எழுந்த கதைகள் கேட்டிருக்கிறேன்; பார்க்கவில்லை.
காதலின் எதிரிகளை சீர்திருத்தும் நோக்குடனும் இது பதியப்படவில்லை, காதலுக்கு வரைபடம் வரையவும் நான் தயாராக இல்லை. வாழ்கையின் பாதையில் காதலித்துப் பாருங்கள்; தோற்றால்? நிச்சமாய் எனக்குத் தெரியும் அது உங்களின் பிழை மட்டுமல்ல என்று! ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்தருளிய சிவபுராண வரிகள் சில காதலுக்கும் பொருந்தும் போலும்,
“கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று”
Read more »

Skype உபயோகிப்பவரா நீங்கள்? – இதையும் கொஞ்சம் பாருங்களேன்! (படங்கள்)



Skype நிறுவனம் தனது புதிய Office ஒன்றை, முற்றிலும் நவீனமயமான வடிவமைப்புடன் 54,000 சதுரஅடி பரப்பளவில் கலிபோர்னியாவின் Palo Alto வில் திறந்திருக்கிறது. உலகின் முதற்தர Office ஆக இது திகழ வேண்டுமென திட்டமிட்டு இராப்பகலாய் உழைத்து வடிவமைத்திருக்கிறார்களாம்.
இதன் வடிவமைப்பில் அசந்து போய், அங்கு பணி புரியும் சுமார் 250 பணியாளர்களும் இப்போது புதிய உற்சாகத்துடன் இருக்கிறார்களாம்.
இது தான் அந்த Office












Read more »

ISO கோப்புகளை உருவாக்குவதற்கு…!


விண்டோஸ் இமேஜ் கோப்பு போர்மட்டில் குறிப்பிடத்தக்கது ISO போர்மட் ஆகும். இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் மற்றும் ஒரு சில மென்பொருள்களை ISO போர்மட்டில் மட்டுமே இருக்கும்.
இவ்வாறு உள்ள ISO கோப்புகளை பூட்டபிள் கோப்பாக மாற்ற வேண்டுமெனில் ஏதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே மாற்ற முடியும்.
இவ்வாறு மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் சாதாரண கோப்புகளை ISO பைலாக மாற்றம் செய்வதற்கு இணையத்தில் இருக்கும் மென்பொருள்கள் குறைவு, ஆனால் இந்த இரண்டு பயன்பாடுகளையும் செய்வதற்கு ஒரே மென்பொருள் உதவி செய்கிறது.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்து கொண்டு இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
ஒப்பன் ஆகும் விண்டோவில் DVD to ISO மற்றும் ISO to DVD இரண்டில் விருப்பமான தேர்வினை தேர்வு செய்யவும். தேர்வு செய்து கொண்டு, பின் குறிப்பிட்ட கோப்பை தேர்வு செய்யவும். அடுத்து Run என்னும் பொத்தானை அழுத்தவும்.
குறிப்பிட்ட சில மணி நேரங்களில் கோப்பானது மாற்றம் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.
இந்த மென்பொருள் சீடி, டிவீடி மற்றும் புளுரேடிஸ்க் போன்றவற்றை ஆதரிக்க கூடியது ஆகும். இந்த இயங்குதளத்தை விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, ஏழு ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். ISO கோப்புகளை உருவாக்க இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும்.
இணையதள முகவரி : BDlot DVD ISO
Read more »

16 மெகாபிக்செல் கேமராவுடன் வரும் புதிய நோக்கியா போன்


முன்னணி மொபைல் நிறுவனமான நோக்கியா தமது அடுத்த படைப்பை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. நோக்கியா-801 என்ற பெயரில் வரும் இந்த புதிய மொபைல் ஸ்டைலாகவும், தகுந்த விலையிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய மொபைல் சிறந்த டிஸ்ப்ளேயும் தொடு வசதியும் நவீன் தொழில் நுட்பமும் ஒருங்கே கொண்டுள்ளன.
இந்த மொபைல் உலக அளவில் எண்ணற்ற வாடிக்கையாளர்களைத் தன்வசப்படுத்திவிடும் என நம்பப்படுகிறது. அந்த அளவிற்கு இது சகல வசதிகளுடன் வரவிருக்கிறது. குறிப்பாக இதன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் ப்ராஸஸர் தரமான செயல் திரனுக்கும், மல்டிமீடியாக்களை இயக்குவதிலும் முக்கிய பங்கை வகிக்கும்.
நோக்கியா-801ன் அமோலட் தொடுதிரை 3.8 இன்ச் அளவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேயில் படங்களை ஸ்க்ரோல் செய்யலாம் மற்றும் சுழல வைக்கலாம். மேலும் இந்த அகல திரையில் வீடியோ காட்சிகளைப் பார்ப்பது புதிய அனுபவத்தைத் தரும்.
நோக்கியா-801ன் கேமராவை எடுத்துக் கொண்டால் அது ஸினான் ப்ளாஷ் கொண்ட 16 மெகா பிக்ஸல் கார்ல் சிஸ் கேமாரவாகும். இது மற்ற மொபைல்களில் இல்லாத ஒன்றாகும். மேலும் இந்த கேமராவில் படங்களையும் காட்சிகளையும் மிக துல்லியமாக எடுக்கலாம்.
இதன் மெமரியைப் பார்த்தால் இது 32 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய அளவிற்கு 16 ஜிபி இன்டர்னல் மெமரி சேமிப்பைக் கொண்டிருக்கிறது. அதனால் அதிகமான அளவில் இந்த மொபைலில் நாம் தகவல்களே படங்களை மற்றும் காட்சிகளை சேமித்து வைக்க முடியும்.
எப்பொழுதுமே நோக்கியா மொபைல்களில் பேட்டரி திறன் தனிச் சிறப்பு பெற்றிருக்கும். அந்த வகையில் இந்த போன் 1,550 எம்ஏஎச் நான் ரிமூவபில் லித்தியான்-அயான் பேட்டரியைக் கொண்டுள்ளது. வழக்கமாக நோக்கியா மொபைல்களில் பேட்டரியைத் தனியாக எடுத்து விடலாம். ஆனால் இந்த மொபைலில் அவ்வாறு எடுக்க முடியாது. அதன் மூலம் இதன் மின் திறன் மூலம் நீண்ட நேரம் பேச முடியும். அதே நேரத்தில் இது மொபைலுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.
மற்ற சிறப்பம்சங்களைப் பார்த்தால் தகவல் பரிமாற்றத்திற்கான இதன் ப்ளூடூத் மற்றும் வைபை வசதிகள் மிகச் சிறப்பாக உள்ளன. மேலும் இதில் ஜிபிஎஸ் வசதியும் உள்ளது. மேலும் இந்த மொபைல் மிக ஸ்டைலாக, சிறந்த வண்ணம் கொண்டு ராயல் லுக்கோடு வரவிருக்கிறது. இதன் விலை ரூ.22,500க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக இந்த மொபைல் இந்திய மொபைல் சந்தையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்
Read more »

அழகு ஆறு

"னக்கு அழகாய் தெரிகிற ஆறை அதிகம் அலட்டாமல் எழுது" என்று அன்பாய் சொன்ன துர்காவுக்கு நன்றி. முதலிலும் விசர்குணம்(வித்தியாசமான) பத்தி எழுதச்சொல்லி வேண்டுதல் விடுத்த துர்க்கா ,சினேகிதிக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவர்களின் பதிவை படிப்பதற்கே நான் அதிக நேரம் ஒதுக்குவதால் எனக்கு கிடைக்கும் குறுகிய நேரத்தில் விசர்குணம் பற்றிய பதிவு எழுத முடியாமல் காலம் போய்விட்டது.(அப்படியில்லை மானத்தை காப்பாற்றிக் கொண்டேன். :-)) ) சரி இந்த அழகான பதிவை எழுதலாம் என்று முடிவுசெய்துவிட்டேன்.

எனக்கு பிடித்தில் எல்லாம் ஒரு அழகு இருக்கிறது என்பது என் அபிப்பிராயம். அப்படி எனக்கு பிடித்த தருணங்கள் வெறும் ஆறுதானா? இதோ:

1. அன்பாய் அந்திப்பொழுதில் பூங்காவில் கெந்தல் நடை புரியும் இளம்/கிழம் ஜோடிகள்.

அப்பப்போ நேரம் கிடைக்கும்போது அருகில் உள்ள பூங்காவுக்குள் என் கண்களுடனும் என் மூன்றாவது கண் கமராவுடனும் நுழைவது வழக்கம். அங்கே இருக்கும் அழகான பூக்கள் முதல் புழுவரை என் மூன்று கண்களுக்குள்ளும் பதிந்து வைப்பது உண்டு. அப்போது அங்கே நடை பயிலும் இளம்,கிழம் ஜோடிகளும் அவர்கள் அன்பும் கண்டு வியந்ததும் உண்டு, நொந்ததுமுண்டு. { நாம் எல்லாம் எப்ப இப்படி? :-)) }


2 மாலைப்பொழுதில் ஜெர்மன் நீண்டவழி பாதையுடாக என் துவிச்சக்கர வண்டியில் நன்பர்களுடன் போட்டிபோடும் போதும், அரட்டை அடிக்கும் போதும்.


ஓவ்வொரு சனி பின்பகல் முதல் எந்த காரியமும் எனக்கு ஓடாது. நன்பர்களுடன் நாளை அடிக்க இருக்கும் அரட்டை பற்றிய சிந்தனையே. ஞாயிறு அவர்களுடன் செல்லும் அந்த அடர்ந்த(?) காட்டு நெடுவழி முதல் என் ஓட்டை துவிச்சக்கரவண்டிமுதல் அழகாய்தான் தெரியும். {சில நன்பர்களுடைய முகங்கள் என் முன் வந்து பயம் காட்டுவதை நான் இங்கே கணக்கெடுக்கவில்லை :-)) } நாங்கள் அடிக்கும் அரட்டை அப்படி! ( எப்படி? )


3. அருமையான திரைக்கதையும் அதை சிறந்த முறையில் படம்பிடிக்கக்கூடிய தொழில் நுட்பமும் கூடிவரும் திரை காவியங்கள் பார்கையிலே


நான் ஒரு சிறந்த ரசிகன்.{அப்படி நினைக்கிறேன்} அதனால்தான் அழகை ரசிக்கிறேன். அதேபோல் அழகான கதை , நடிப்பு , இசை கொண்ட திரைக்காவியங்களும் எனக்கு திகட்டுவதில்லை. தமிழ்,ஆங்கில சினிமா முதல் ஈரானிய திரைப்படங்கள் என என் ரசனை உலக அழவில் விரிந்திருக்கும். ஒரு நடிகன் முதலில் சிறந்த நடிகனாகவே ஜெயிக்க வேண்டுமே தவிர அவன் சொந்த வாழ்கையில் நல்லவனா? கெட்டவனா? அது தேவையில்லாத விடயம். அவன் ஒரு நடிகன் என்று பெயர் பெற முதலில் நடிக்க தெரிந்திருக்கவேண்டும். அதன் அடிப்படையில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகர்கள் எல்லோருடைய விசிறி நான்.


4.இசையே என் காதலி


இசையின் இனிமை யாருக்குத்தான் கசக்கும் .திரைப்படங்கள் போலவே பல்வேறு தரப்பட்ட இசையை ரசிக்க பிடிக்கும். தமிழ் இசைமட்டுமல்ல ஆங்கில இசைகள் கூட என்னை கவர்தன என்றால் அதுவும் எனக்கு அழகாகத்தான் தெரிந்தன. எனது தெரிவுப் பாடல் குறுவட்டை கேட்பவர்கள் தங்கள் தலையை பித்துகொள்வது திண்ணம். அவர்களுக்கு திண்டாட்டம். கட்டாயம் நான் தூங்கம்போது செவ்விந்தியன்களில் விதவிதமான
புல்லாங்குழல் ஓசை கேட்க வேண்டும். (இதுவும் என் விசர்குணம்தான்) அது இல்லாவிடில் வேறு மென்மையான இசை. இப்படியான தருணங்களில் நம்ம இளையராஜா எனக்கு உதவுவார். காலை முதல் மாலை வரை இசையுடன் கழிப்பதால் அதுவும் அழகாகவே எனக்கு தென்படுகிறது.

5.தமிழ்


நான் கண்டு வியந்த , அழகை உணர்ந்தவற்றுள் தமிழுக்கே முதலிடம். எத்தனை அழகு. நான் ஓர் தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் என்னை பெருமைப்பட வைத்ததில் முதலிடம் எனது மொழியே. இலக்கணம் , இலக்கியம் , முத்தமிழ் , தமிழ் வார்த்தை பிரையோகம், எதுகை மோனை , அடுக்குமொழி ,அடைமொழி ம்... சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்துக்கும் அடிமை நான். நான் அறிந்த ஏனைய சில மொழிகளில் சொல் கொஞ்சமும் பாவனை அதிகமாகவும் இருப்பது கண்டிருக்கிறேன். ஆனால் தமிழ் நான் கண்டு வியந்த மொழி. எனக்கு தமிழ் அறிவு கொஞ்சம் குறைவுதான் என்றாலும் மற்றவர் கவி,கட்டுரை,விமர்சனம் பார்த்து கற்றதும் ரசித்ததும் ஏராளம்.


6.எங்கள் குடும்பம்


பரபரப்பான மேலைத்தேய வாழ்க்கையில் கூட குறிப்பிட்ட ஒரு தினம் ஒதுக்கி கலந்துரையாடுவதும் , குதித்து விளையாடுவதும் எம் வீட்டின் மாற்ற முடியாத வழக்கம். எந்த ஒரு துன்பமும் எங்களை அடைய விடாமல் பாதுகாத்து கொள்ளும் எம் பெற்றோர்களையும் , அவர்களை மனதளவில் நோகடிக்காத எம்மையும் எமக்கே பிடித்திருக்கிறது. கஸ்டப்பட்ட காலத்திலும் கடிக்க எமக்கு கடிஜோக் இருந்திருக்கிறது.கஸ்டத்தை மறந்திருக்கிறோம். எமக்கு கடவுள் தந்த கொடை இது. எனக்கும்தான்.

Read more »

தொழிநுட்பம் பெண்கள் வசம் என்றால்……. (படங்கள் இணைப்பு)

தொழிநுட்பம் பெண்களின் கைகளில் இருந்திருந்தால் கண்டுபிடிப்புக்கள் எப்படி அமைந்து இருக்கக் கூடும் என்பதை காட்டுகின்ற புகைப்படங்கள் இவை.
 

Read more »
 
-