இன்று உயிர்த்த ஞாயிறு. HAPPY EASTER!..


உயிர்த்தார்… உயிர்த்தார்… கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்…!” என்ற கீதம் முழங்க மன்னவர் இயேசு உயிர்த்தெழுந்தார்.பரமன் இயேசு, தாம் வாக்களித்தபடியே மரித்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த நன்னாளை இன்று கிறிஸ்தவ உலகமே விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கின்றது.
மரணத்தை வென்ற இயேசுவின் உயிர்ப்பு மானிடர் அனைவருக்கும் மீட்பளிக்கின்றது. இதுதானே இறை இயேசுவின்; லட்சியம், நோக்கம் எல்லாம?
இயேசுவின் மரித்த திருவுடலை சிலுவையினின்றும் இறக்கி அன்னை மரியாளின் மடியில் கிடத்தினர். பின்னர் அருகிலிருந்த கல்லறை ஒன்றில் அவரை அடக்கம் செய்தனர். அந்தக் கல்லறைமீது பெரிய பாறைக்கல் ஒன்றையும் வைத்துவிட்டு உறவினர்களும் சீடரும் சென்றுவிட்டனர்.
அதேவேளை கல்லறையை இரு போர் வீரர்கள் காவல் காக்கவும் தவறவில்லை.மறுநாட் காலை பரிமளத் தைலங்களுடன் மரியாள் தன் சீடர்களுடனும் உறவினர்களுடனும்; கல்லறையில் கிறிஸ்துவின் உடலைத் தேடினார். ஆனால்… அங்கே கிறிஸ்துவில் உடல் இருக்கவில்லை.
கல்லறையை மூடி வைத்திருந்த பாறைக் கல் அகற்றப்பட்டு கல்லறை வெறுமையாக இருந்தது. அவர்கள் அதிசயப்பட்டுத் தங்களுக்குள் கதைத்துக் கொண்டனர்.
அப்போது கல்லறையின் தலைமாட்டில் மின்னலைப் போன்று ஆடையணிந்த வான தூதர்கள் இருவர் இருக்க கண்டு ஆச்சரியமடைந்த வேளை,”உயிரோடு இருப்பவரை கல்லறையில் தேடுவதேன்? கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் அன்று கூறியதை நினைவுப்படுத்திப் பாருங்கள்” என்று கூறினர். சிறு பொழுதில் வானதூதர் மறைந்தனர்.
ஆம். கிறிஸ்து, நம் மத்தியில் இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அந்த விசுவாசத்துடன், நாமும் எமது மன்றாட்டுக்களை உயிர்த்த இயேசுவின் பாதக்கமலங்களில் சமர்ப்பிப்போம்.”இறைவா, எமது நாட்டில் நிரந்தர சமாதானமும் நீடித்த ஒற்றுமையும் நிலவ அருள்தாரும்.”
இயேசுவுக்கு உரியவற்றை நாடுதல்.  இவனை மன்னிக்கவே முடியாது இவன் முகத்தை நான் பார்க்க கூடாது என்றும், நான் செத்தாலும் அவனுடன் பேசமாட்டேன் என்கிற இருளான கோபங்களையும், வெறுப்பையும் விட்டுவிட்டு மன்னிக்கின்றபோது நாமும் கிறிஸ்துவோடு உயிர்த்தவர்கள் என்பதில் அர்த்தமிருக்கிறது.  நமக்குள் இயேசுவின் உயிர்ப்பு நிகழ நாம் அனைவரும் இயேசுவுக்காக வாழுவோம், அர்த்தமுள்ள வகையில் நாம் அனைவரையும் மன்னிப்போம், ஏற்றுக்கொள்வோம். இறைமகன் காட்டிய வழியில் அவருக்கு பிரமாணிக்கமாய் நாமும் வாழ இந்நாளில் திடசங்கற்பம் கொள்வோம்.
Read more »

நடக்க வேண்டியவை நடந்தே தீரும்.....- சத்திய சாயி பாபா





 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நாடும் உலகமும் நன்மை பெறட்டும் .

பாரததேசம் என்பது ஒரு தனியான நாட்டை மட்டும் குறிப்பிடுவது அல்ல.
உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு துõய்மையான ஜீவ பிரும்ம தத்துவத்தை போதிக்கக்கூடிய அமைதி நிறைந்த இடம்.
சரஸ்வதி, பகவதி, பாரதி என்றெல்லாம் கூறுகிறோம்.
சரஸ்வதி வாக்கிற்கு சக்தி கொடுக்கும் தேவதை.
ஆகவே, வாக்கின் சக்தியால் நல்ல பணியை செய்பவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் பாரதத்தின் மக்களே.
இந்த பண்பு மனித குலத்திற்கே பொருந்தக் கூடியதாகும்.

ஆன்மிக, அரசியல் மற்றும் இலக்கிய துறைகளிலும் மேன்மை பெற்ற நாடு இது.
ஒவ்வொரு உள்ளமும் நல்ல எண்ணங்களைக் கொண்டால்,
நல்ல விளைவுகள் ஏற்படும்.
அப்போது உலகம் முழுவதுமே நன்மை ஏற்படும்.
இதுவே உண்மையான பாரதத்தின் உயரிய தொண்டு.

நான் உங்களை வேறொன்றும் கேட்கவில்லை.
பிரேமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மனிதன் ஒவ்வொரு உயிரையும் கடவுளின் குழந்தை என்று கருதவேண்டும்.
வெறுப்பை விட்டொழித்து யாருக்கும் தீங்கிழைக்காத நல்லுணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எனக்கு கவலை என்பதே கிடையாது.
துயரமும் இல்லை.
எல்லாமே நிலையற்றவை என நான் கருதுகிறேன்.
எதுவும் நம்முடையவை அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
வரும்போது கொண்டுவரவில்லை.
போகும்போது விலாசமும் கொடுப்பதில்லை.
பிறகு இவற்றைப்பற்றிய கவலையை மட்டும் சுமப்பானேன்?

வாழும் குறுகிய காலத்தில் தெய்வ சிந்தனையுடன்,
தளராத நம்பிக்கையுடன்,
வேறுபாட்டு உணர்வை நீக்கி,
எல்லோரும் தெய்வத்தின் உருவங்களே என்று உணர்ந்து வாழுங்கள்.
உங்கள் வாழ்க்கை புனிதமாகும்.
நாடும் உலகமும் நன்மை பெறும்.

நீ வெளிச்சத்தில் இருக்கிறாய்.
ஒளி உன்னிடம் இருக்கிறது.
நீயே ஒளியாகிறாய்.
உன் சொல், செயல், சிந்தனை, குணம், மனம் ஆகியவற்றை கவனி.

நீ நம்பிக்கையை வளர்த்துக்கொள்.
அப்போதுதான் பிரச்னைகள் வெள்ளம்போல வந்து தாக்கும்போது, பாறைபோல எதிர்த்து நிற்க இயலும்.
வெளியுலக வாழ்வின் மாறும் சூழ்நிலைகளை அந்த நம்பிக்கை மறக்கவைக்கும்.
ராமதாசர் சிறையிலிடப்பட்டபோது, அந்த நன்மைக்காக ராமருக்கு நன்றி கூறினார்.
ஏனென்றால், சிறையின் பெருஞ்சுவர்கள் கனிவு கூர்ந்து,
வெளி உலகத்தை முழுமையாக விலக்கி வைத்து,
ராமநாம சிந்தனையில் இடையூறின்றி தொடர வைத்தமைக்காக நன்றி பாராட்டினார்.

ஞானக்கதவுகள் திறக்கட்டும்.
அறியாமைத்திரை கிழிபடட்டும்.
தெய்வீக பேரானந்தம் வீட்டுக்குள் செல்லட்டும்.
நிலையான நிம்மதியில் நீ இருப்பாய்.

முன்னதாக புறப்படு.
மெதுவாக ஓட்டு.
பாதுகாப்பாய் போய்ச்சேர்.
உன் வாழ்வை ரோஜாப்பூவாக்கிக்கொள்.
அது "நறுமணம்' என்ற மவுனமொழியில் பேசட்டும்.

தன்னலமற்ற தொண்டு என்னை மகிழச் செய்கிறது.
அனைத்து ஒழுக்கங்களுக்கும் அடிப்படை தூய்மையான மனம்தான்.

மிக விரும்பக்கூடிய செல்வம் இறையருளே.
கண்ணை இமை காப்பதுபோல் அவன் உங்களை காப்பாற்றுவான்.
இதில் சந்தேகம் வேண்டாம்.
நல்லதையே கேள்; நல்லதையே காண்; நன்றே செய்; நலமே எண்ணு; அப்போது தீயவை களையப்படும். இறையருள் உனக்கு இனிதே கிடைக்கும்.


ஆத்மாவிற்கு உரமிடுங்கள் .

பாரதப் பண்பாடு அனுபவத்தாலும், வெளியுலகம் அறிவதாலும் மேலும் மேலும் சிறப்படைந்து வருகிறது.
அனுபவம் மேலிட மேலிட நம் பண்பாடு பற்றி அதிகம் அறிகிறோம். புதிய எண்ணங்கள் நமக்கு எழுகின்றன.

உன் காலில் தைத்துள்ள முள்ளை இன்னொரு முள்ளால்தான் எடுக்க வேண்டும்.
பாதத்தில் தைத்த முள்ளை எடுக்க கோடாரியைப் பயன்படுத்த முடியாது.
வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும்.
ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள மிக முக்கியமான மனித இயல்புகளால்தான் முடியும்.

பல மரங்களைப் பார்த்திருக்கலாம்.
சில பெரிய ஆலமரங்கள் பெரிய மாளிகை போலப் பெரியதாய் காட்சி அளிக்கின்றன.
அதன் விதையைப் பார்த்தால் கடுகு போல மிகச் சிறியதாயுள்ளது.
அந்த மிகச்சிறிய விதையுள் தான் அந்த மிகப்பெரிய ஆலமரம் உள்ளது என்பதுதான் உண்மை.
இதே போலப் பிரபஞ்சமெனும் பெரிய மரத்தில் காண்பன யாவும், தெய்வீகமெனும் சிறிய விதையிலிருந்து தோன்றியதுதான்.
இவ்வண்ணமே உன் பெரிய உடலில் ஆத்மாவின் அம்சமாக மிகமிகச் சின்னஞ்சிறிய விதையுள்ளது.
அதற்கு உரமிட்டு, வளர்த்து செழிக்கவிடு.
அப்போதுதான் பிரபஞ்சத்தின் தெய்வ ஸ்வரூபம் தெரியும்.

ஒரு மனிதன் வாழ்வில் நடக்க வேண்டியவை நடந்தே தீரும்.
தவிர்க்க முடியாத சம்பவங்களை எடுத்துக் கொண்டு பொறாமையை வளர்க்கப் பயன்படுத்துவது தவறு.
அது நல்ல மனித இயல்பு அல்ல.
அனுபவிக்க வேண்டிய நோய், சூழும் துன்பம், நமக்குள்ள தொந்தரவுகள் யாவும் வெளியிலிருந்து வந்தவையோ, கடவுள் கொடுத்தவையோ அல்ல.
அவை யாவும் நம் செயலின் விளைவுகளே.

பயமே நோய்க்கு காரணம்
* இன்று மனிதன் கவலையின் கைதியாக இருக்கிறான்.
மன நிறைவின்மையே கவலைக்கு காரணம். கவலை வேகத்தை விளைவிக்கிறது.
உணவை சமைக்கும் நெருப்பை கடவுள் என கீதை சொல்கிறது. உண்பதன் நோக்கம், கடவுள் நமக்கு அளித்த கடமைகளைச் செய்வது அல்லது அவனை மகிழ்விப்பதாகும்.
இதன் விளைவு கடவுளை நோக்கி முன்னேறுவது.

* மனிதன் இன்பமாக வாழவே பிறந்திருக்கிறான். ஆனால், அவன் துன்பத்தில் தவழுகிறான். இது வருத்தமான விஷயம்.
ஆனந்தத்தின் ஆதாரம் அவனிடமே இருக்கிறது.
உண்மையான கல்வி, மனிதனுக்கு இன்பத்தை எவ்வாறு பெற வேண்டும் என்பதுபற்றி கற்பிக்க வேண்டும்.
கல்வி உன்னை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

* ஒருவன் உன்னை குற்றம் கூறியோ, அவதூறாக பேசியோ, துன்புறுத்தினாலும், அதனையே அவனுக்கு திருப்பாதே.
சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள். ஒருவனை நாய் கடித்தால் அவன் அதை திரும்ப கடிப்பதில்லை.
28 -09 -2006
---------------

நேர்மையான வாழ்க்கையின் முதல் அடிப்படைத் தேவை,
மௌனத்தைக் கடைப்பிடிப்பது தான்.
ஆன்மீக சாதகரின் பேச்சே மௌனம் தான்.
மௌனத்தின் ஆழத்தில் தான் கடவுளின் குரலை நீ கேட்க முடியும்.

இரண்டாவது அடிப்படைத் தேவை சுத்தம்.
வெளிப்புற சுத்தம் அல்ல.உட்புற சுத்தம்.
இந்த உட்புற சுத்ததிற்கென்று தனிப்பட்ட சோப்பும், தண்ணீரும் கிடையாது.
உட்புற சுத்ததிற்கு...விடாப்பிடியான நம்பிக்கை என்ற சோப்பும்,
இடை விடாத சாதனை என்கின்ற தண்ணீரும் இருக்கின்றன.
மூன்றாவது அடிப்படைத் தேவை...
தனது கடமையின் மேல் பக்தி கலந்த ஒரு ஈடுபாடு.

கடமையே கடவுள்.வேலையே வழிபாடு.
ஒரு குறிப்பிட்ட வேலை நேரத்தின் போது போடப்படுகின்ற யூனிபார்ம் போல வழிபாடு இருக்கக் கூடாது.[வேண்டும் போது போது போடுவதும் ...வேண்டாத போது கழட்டுவதும். ]

உங்கள் மனமானது இந்த மூன்று அடிப்படைத் தேவைகள் பற்றி விடாமல் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
1.மௌனம்.
2.உட்புற சுத்தம்.
3.கடமையில் கண்ணாக இருத்தல்.

வெளி உலகத்தில் வாழ்க்கை தீராத துன்பம் நிரம்பியது.
ஆனால்...உள் உலகத்தில் வாழ்க்கை என்பது...எளிமையானது.சுலபமானது.
வாழ்க்கை என்பது ஒரு புனித யாத்திரை.
மனிதன் முள் நிறைந்த கரடு முரடான பாதையில் சிரமப்பட்டுக் கொண்டு போகிறான்.
பகவத் நாமம் அவன் நாவிலே இருந்தால் தாகம் எடுக்காது.
இதயத்திலே இறை உருவம் இருந்தால்...களைப்புத் தெரியாது.
சாதுக்களின் சேர்க்கை அவனை உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் பயணம் செய்ய வைக்கும்.
பகவான் கூப்பிடு தூரத்தில் தான் இருக்கின்றான் என்ற நிச்சயம் உனக்கு வலுவூட்டும். உன் இதயத்திற்கு தைரியமூட்டும்.


ஆன்மீக வைத்தியதிலும் பல மருந்துகள் உள்ளன.
அத்தனை மருந்துகளிலும் சர்வரோக நிவாரணி....பிரேமை ஒன்று தான்.
A முதல் Z வரை உள்ள அனைத்து விட்டமின்களும் பிரேமையில் அடக்கம்.

நான் என்றும் எப்போதும்....எப்போதும்....
உங்களுடனேயே இருக்கின்றேன்.
உங்களுக்கும் எனக்கும் உள்ள இடைவெளி....
உங்கள் கற்பனையே.
உங்கள் இதய விளக்கில்
அன்புச் சுடரை ஏற்றி வைக்க
நான் வந்திருக்கின்றேன்.
அதன் ஒளியிலே நீங்கள் ஒவ்வொருவரையும்
சாயியாகவே காண்பீர்கள்.
21 - 09-2006
சாய் ராம்.
----------------------------
SWAMI PHOTOS LINKS [NEW]
Read more »

பகவான் சத்ய சாயி பாபா பற்றிய அருமையான பதிவுகள்


அதிசய சித்தர் அவதாரம்
எனது வாழ்க்கையே எனது செய்தி

தவித்த வாய்க்கு தண்ணீர் தந்தவர்

உன் உள்ளமும் பிரசாந்தி தான்.

போதனைகள்


29.4.2009 கொடைக்கானல் அருளுரை

பாபா உணர்த்தும் பாடம்!

ஒப்பற்ற ஒரு உயர்ந்த புனித சக்தி.

அற்புதங்களையும் பார்க்கத் தெரியவேண்டும்!

நானே சிவன்! நானே சிவம்! சிவோஹம்! சிவோஹம்!


சாயி விரத கதை

ஸ்ரீ சத்ய சாயியின் கிறிஸ்துமஸ் தரிசனம்

ஸ்ரீ சத்ய சாயியின் கோடைப் பயணம்

நிலவில் கண்ட சாயிபாபாவின் விஸ்வ விராட் ஸ்வரூப தரிசனம்

சுவாமியின் தரிசனம் காணுவோம்!

Happy Birthday Bhagavan Sri Sathya Sai Baba!

மிகப் பழைய படங்களில் சில (1944 - 46)


சத்ய சாயி பாபாவின் வீடியோ காட்சிகள்


http://www.youtube.com/watch?v=oDnfTd40M0Q&feature=related

http://www.youtube.com/watch?v=hLuRVF30Iy4&feature=related

http://www.youtube.com/watch?v=-pUzkA22NOs&feature=related

http://www.youtube.com/watch?v=CVPYDGcMeJw&feature=related


http://www.youtube.com/watch?v=ZI47DRaW0xo&feature=related


http://www.youtube.com/watch?v=_HNWcZ5G72c&feature=related


http://www.youtube.com/watch?v=1fs1OBY82b0

http://www.youtube.com/watch?v=pPPFZ76ns2w

http://www.youtube.com/watch?v=w8HtbFugrW8

http://www.youtube.com/watch?v=ollVJoRzBtc

http://www.youtube.com/watch?v=02Iwcr53_ro

http://www.youtube.com/watch?v=IKglsz517J4&feature=fvst


http://www.youtube.com/watch?v=GWF3TmK33L8

http://www.youtube.com/watch?v=HbEI2xq9OEw

http://www.youtube.com/watch?v=_fKwJBwTL0M


http://www.youtube.com/watch?v=pc6mwb0Rd-U

http://www.youtube.com/watch?v=_fTreEXbUj0

http://www.youtube.com/watch?v=2HT1IFZcD70


http://www.youtube.com/watch?v=dVzxrPKA8MM

http://www.youtube.com/watch?v=8r23T3UzECM

http://www.youtube.com/watch?v=OF__jZlBqLo

http://www.youtube.com/watch?v=QDW_E_besgI


http://www.youtube.com/watch?v=C43WwWbbDBg

http://www.youtube.com/watch?v=oIl0ItYBFy8

http://www.youtube.com/watch?v=KerOOT97wmM

http://www.youtube.com/watch?v=-Ypfae2yyrk

http://www.youtube.com/watch?v=HuZBjYu6Quo


http://www.youtube.com/watch?v=oA-xAOduMTs

http://www.youtube.com/watch?v=tyeaJpD8Jwg

http://www.youtube.com/watch?v=mz6kxP-B4oc&feature=related
Read more »

Angels & Demons


இந்தப் படத்தில் வரும் காட்சிகளும்,கதாபாத்திரங்களும் கற்பனையே. . எதையும்,யாரையும் குறிப்பிடுபவையல்ல. . .’ என்றுAngels & Demons படத்தின் துவக்கத்திலும்இறுதியிலும் தியேட்டரில் ஸ்லைடு போடுகின்றனர்.
இப்படி எத்தனையோ படங்களில் சொல்லியிருந்தாலும், Angles & Demons-ஐ நாம் அப்படி நம்பிவிடமுடியாதுஇது யாரையோ குறிக்கிறதுஅல்லது யாரையோ குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.இதற்கு ஒரு காரணம்வலுவான பின்னணியும் உண்டு.2006இல் ஸோனி பிக்சர்ஸ் மூலம் வெளியிடப்பட்ட ‘The Davinci Code’, $750மில்லியன் வசூல் செய்து உலக சாதனையை மட்டும் நிகழ்த்தவில்லை.உலக கிறிஸ்துவர்கள்குறிப்பாக கத்தோலிக்க பிரிவினரின் எதிர்ப்பையும் சந்தித்ததுபெரும் தடைகளுக்குப் பிறகு வெளிவந்த அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றதுஒரு Action, thrill, suspense படம் எப்படி இருக்கவேண்டும் என்று இயக்குநர் Ron Howard அதில் நிரூபித்துள்ளார்.
அதற்குக் கொஞ்சமும் குறைவின்றிஅதே வேகத்துடன்விவாதத்திற்குரிய விஷயங்களுடன் வந்திருக்கும் Ron Haward-இன் புதிய படம்தான் Angels & Demons.Angels என்றால் தேவதைகள் என்பது தெரியும்Demons என்பது என்னவென்று எனக்குத் தெரியாததால்டிக்ஷனரியைப் புரட்டினேன்இதன் உச்சரிப்பு,டெமன் அல்லடீமன்அர்த்தம்Supernatural being of eveil qwalities தீய ஆவி. . .
ஆகநல்ல சக்திக்கும்தீய சக்திக்கும் இடையே நடக்கும் இடையறாத யுத்தம்தான் கதையார் நல்ல சக்தி என்பதை எவர் தீர்மானிப்பது என்பதில்தான்விஞ்ஞானிகளுக்கும்ஆன்மிக பீடங்களுக்கும் பனிப்போர் நடந்து வருகிறது.‘The Davinci Code’, ‘Angels & Demons’இரண்டும் பல லட்சம் பிரதிகள் பரபரப்பாக விற்பனையான நாவல்கள்.இவற்றை எழுதியவர் Dan Brownஇந்த நாவலின் நாயகன்,வழக்கமான மசாலா படங்களில் வரும் போலீஸ்காரனோ அல்லது ரகசிய ஏஜெண்டோ கிடையாது.ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் Robert Langdon தான் ஹீரோஇந்தப் பாத்திரத்தில் ஹாலிவுட்டின் பிரபல ஹீரோ Tom Hanks நடித்துள்ளார்.
The Davinci Code -இலும் இவர் இதே பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் கையில் ஆயுதம் கிடையாதுசண்டை போடமாட்டார்இவர் ஒருSymboligist. அதாவது குறிகுறியீடுகளைப் படிப்பவர்அதன் மூலம் பரபரப்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு எளிய தீர்வைத் தருபவர்.கடந்த படத்தில் கதாநாயகி அழகாக இல்லை என்கிற குறை என்னைப்போன்ற கலா ரசிகர்களுக்கு இருந்ததை உணர்ந்த இயக்குநர்,இந்தப் புதிய படத்தில் அந்தக் குறையை நீக்கிவிட்டார்.இஸ்ரேலிய நடிகை Ayelet Zureer என்கிற பேரழகிதான் நாயகிஇவர் நின்றால் நிலாநடந்தால் நந்தவனம்இவரது ஓரவிழிப் பார்வைக்காகஎவ்வளவு தூர வழியையும் கடக்கலாம்ஆறடி ஆரஞ்சுஉடம்பெல்லாம் ரோஜா பஞ்சு.சினிமாக்களில் Sequelவருவதுண்டுஅதாவது தொடர்ச்சிஇரண்டாவது பாகம்.உலகம் சுற்றும் வாலிபனுடைய sequelகிழக்காப்பிரிக்காவில் ராஜு,ஊமை விழிகளின் sequelமூங்கில்கோட்டைஇரண்டும் அறிவிக்கப்பட்டும் இன்னும் எடுக்கப்படவில்லை.இந்த இரண்டு படங்களையும் எடுக்கும் முயற்சியில் விஜயகாந்த் இறங்கினால்,இவை அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் என்பது என் நம்பிக்கை. . .ஒரு படத்திற்கு முந்தியது,இந்தக் கதைக்குமுன் என்ன என்பது Prequel.அப்படித்தான் The Davinci Code-இன் prequel-ஆக Angels & Demons வெளிவந்து,பெரிய வசூல் சாதனையையும்பெரும் வரவேற்பையும் பெற்றுவரும் அதே சமயம்சர்ச்சுகளாலும்கத்தோலிக்கர்களாலும்உலக கிறிஸ்துவர்களின் தலைவர் போப் இருக்கும் வாடிகன் நகரத்திலிருந்தும் எதிர்ப்பும் பெரிய அளவில் கிளம்பி இருக்கிறது.இந்த அளவிற்கு எதிர்ப்பைச் சந்திக்கும் இப்படத்தின் கதைதான் என்ன?போப் இறந்துபோன சூழலில் கதை துவங்குகிறதுஅதனால் அவரால் தத்தெடுக்கப்பட்ட பாதிரியார் Ewan the gregon மிகுந்த துயரத்தில் இருக்கிறார்.அடுத்த போப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நான்கு கார்டினல்கள்-அல்லது இவர்களில் ஒருவர்தான் அடுத்த போப்பாக வரவேண்டியவர்அந்த நால்வரும் கடத்தப்படுகின்றனர்.அது மட்டுமின்றிகார்டினல்களைக் கடத்தியவன் இவர்களை அன்றிரவே எட்டுஒன்பதுபத்துபதினொன்று மணிக்கு ஒவ்வொருவராய்க் கொல்வதாக எச்சரிக்கையும் விடுகிறான்.அவன் விட்டுச்சென்ற காகிதத்தில் Illuminati என்கிற symbol உள்ளதுஇது17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள்நாஸ்திகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்புஇதில் ஆரம்பத்தில் கலிலீயோ போன்ற விஞ்ஞானிகளும் உறுப்பினராக இருந்ததுண்டாம்விஞ்ஞானத்தை எப்பொழுதுமே மதம் மறுத்து வந்துள்ளதுவிஞ்ஞானம் வளர வளர,மக்களின் மூட நம்பிக்கைகள் குறையும்போதுமதத்தின் வியாபாரம் படுத்துவிடும்விஞ்ஞானத்தையும்விஞ்ஞானிகளையும் மிகவும் இழிவுபடுத்தி கிறிஸ்துவத்தின் தலைநகரான வாடிகன் நகரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல சதிகளைச் செய்து விஞ்ஞானிகளைக் கொன்றுள்ளதாக இந்தக் கதை கூறுகிறது.அந்த விஞ்ஞானிகளுடைய வழித்தோன்றல்கள்,நாஸ்திகர்களால் இன்றும் நடத்தப்படும் ஒரு ரகசிய சபைதான் Illuminati. . .பழிவாங்கத் தக்க தருணத்திற்காகக் காத்திருந்த அவர்கள்புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வேளையில் நான்குகார்டினல்களைக் கடத்திவிடுகின்றனர்.Symboligist-ஆன Tom Hanks, புனித நகருக்கு வந்து குறியீடுகளைப் படித்துஒவ்வொரு இடமாக வேகமாகச் சென்றும்சொன்ன நேரத்தில் முதல் மூன்று கார்டினல்கள் கொல்லப்படுகின்றனர்.நிலம் காற்று நெருப்பு என்று மூன்று விதத்தில் மூவர் கொல்லப்பட,இறுதியில் தண்ணீரில் கொல்லப்பட இருந்த Cardinal-ஐ மட்டுமே Tom Hanks-ஆல் காப்பாற்ற முடிகிறது.இந்தக் கதையின் ஊடே பரபரப்பான இன்னொரு முடிச்சும் போடப்படுகிறதுகதாநாயகி Ayelet Zureet ஒரு விஞ்ஞானிஜெனிவாவின் ஸெர்ன்லேப்பில் பணிபுரிபவர்அங்கிருந்து ஒரு ஆபத்தான ரசாயனம் திருடு போகிறதுஇதைப்பற்றி நாயகி போலீசில் சொல்லவரும்போதுதான்,நாயகன் Tom Hanks-உடன் நட்பு ஏற்படுகிறது.அந்த ரசாயனமும் தீய சக்திகளின் கைகளில்தான் இருக்கிறதுநான்கு கார்டினல்கள் கொல்லப்பட்டபிறகுசரியாக இரவு 12 மணிக்கு புனித தேவாலயம் உட்பட வாடிகன் நகரையே அழிப்பதுதான் அவர்களின் நோக்கம்.இந்தப் பேரழிவிலிருந்து அந்த நகரையும்புதிய போப்பின் தேர்வுக்காகவும்,பழைய போப்பின் மறைவுக்காகவும் வந்துள்ள லட்சக்கணக்கான மக்களையும் காப்பாற்றுவதும் பெரிய சவாலாக உள்ளது.புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டாராஆபத்தான ரசாயனத்திலிருந்துஅதன் அழிவிலிருந்து புனித நகரம் மீண்டதா என்பதை பரபரப்பான கிளைமேக்ஸில் மெய்சிலிர்க்கும் விதத்தில் இயக்குநர் Ron Hawardதனக்கேயுரிய ஸ்டைலில் அசத்தும் விதத்தில் சொல்கிறார்ஏறக்குறைய 2மணிநேரம் 19 நிமிடங்கள் ஓடும் இப்படம்கொஞ்சம் கூட சலிப்பைத் தரவில்லைஅதற்கு நாவல் எழுதிய Dan Brawnன் விறுவிறுப்பான கதை மட்டுமே காரணமல்ல, David Koepp மற்றும் Akiva golsman ஆகியோருடன் சேர்ந்து எழுதிய திரைக்கதையும் முக்கிய உதவியாக உள்ளது.இந்தப் படம் ஓடும் நேரம்,ஏறக்குறைய ஒரு தமிழ்ப்படம் ஓடும் நேரம்தான்ஆனால்,இவ்வளவு வேகமாக நம் ஆளுங்க ஏன் திரைக்கதையை எழுதுவதில்லைநம் ஆளுங்களுக்கு வேகம் என்றால் சேஸிங் ஸீன்தான். . .இந்தப் படம் வேகம்விறுவிறுப்பு இவைகளில் ஒரு புதிய மைல்கல் என்றே சொல்லவேண்டும்இதேமாதிரிதான் The davinci Code-உம் இருந்தது.இதுபோன்ற படங்கள் இங்கே எப்ப எடுப்பார்கள்?ஒருவேளை கமல்ஹாசன் Angels & Demons நாவலைப் படித்துத்தான்தசாவதாரம்’ படத்தின் கதை எழுதியிருக்க வேண்டும்அதன் சாயல் அதில் நன்றாகத் தெரிகிறதுஆனால்உலக நாயகனாலே ஒரு சிறந்த திரைக்கதையை எழுத முடியாதது உலக வேதனை.பிளேக்டிபிகேன்ஸர்எய்ட்ஸ் என்று ஆளைக் கொல்லும் நோய்கள் ஒரு பக்கம்சூறாவளிபூகம்பம்புயல் மழைசுனாமி என்று இயற்கைப் பேரழிவுகள் ஒரு பக்கம்இவைகளால் இதுவரை உலகில் கொல்லப்பட்டவர்களைவிடமதங்களின் பெயரால்சொர்க்கத்தின் நம்பிக்கையால்கடவுள்களை குஷிப்படுத்த மனிதர்கள் மிக அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.இத்தனை கடவுள்கள் இருந்தும் ஏன் உலகில் இன்றும் ஏழ்மை ஒழியவில்லைஏன் இன்னும் போர் ஓயவில்லை?இன்றும் ஏதோ ஒரு மூலையில் பசிக்காக பால்சுரக்காத முலைகளில் முட்டி மோதும் பிஞ்சின் ஓலம் நம் காதல் விழுந்து கொண்டிருக்கிறது.கடவுள் Angels & Demons- அனுப்புவது இருக்கட்டும்முதலில் ரொட்டி அனுப்பட்டும் என்றுதான் அந்த ஓலம் சொல்கிறது.இந்த ஓரவஞ்சனை சமுதாயத்தில் நிலவும்வரைபணக்காரர்களுக்குப் பாதுகாப்பாக மதபீடங்கள் விளங்கும்வரை illuminatiகளுக்கு அழிவில்லை என்றுதான் நினைக்கிறேன்.அழகை ஆராதிக்காதஅன்பைத் தாலாட்டாதஇசையைச் சீராட்டாத. .மழலையை ரசிக்காத. . . மதம். . அது இருந்தாலென்னஇல்லாவிட்டால் என்ன. . .Angels & Demons குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தையும்அதன் ஆதிக்கத்தையும் குறித்து கேள்வி எழுப்புவதாக நான் நினைக்கவில்லைDan Brawn நாவல்,மற்றும் எழுத்து ஒட்டுமொத்த மூட நம்பிக்கைகளை எதிர்த்து ஒரு போர்ப்பிரகடனமாகும்.
Read more »

பெரிய வெள்ளி....



உலக வாழ் கிருஸ்தவர்கள் இன்றைய தினம் பெரிய வெள்ளி தினத்தை இன்று அனுஷ்டிக்கின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தியில் பெரிய வெளியினது உண்மையான தாற்பரியத்தை புரிந்து கொண்டு செயற்பட்டால் நாட்டில் உண்மையான ஒன்றுமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அது போல் தற்போது உலக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்தும் விடுபட பெரிய வெள்ளி தின கோட்பாட்டை விளங்கி செயற்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வாழ் கிருஸ்தவர்கள் இன்றைய தினம் பெரிய வெள்ளியை அனுஷ்டிகின்றனர்.
Read more »
 
-