(Nokia X3-02) புதிய செல்பேசி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது Nokia நிறுவனம்.


Nokia நிறுவனம் Nokia X3-02 எனும் புதிய கையடக்க தொலைபேசி ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது. தொடுகை உணரக்கூடிய திரை அமைந்துள்ளதுடன் (touch screen) விசைப்பலகையும் சோ்ந்து கவர்ச்சியாக வடிவமைக்கப் பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். இதன் மூலம் கடின பாவனைக்கு விசைப்பலகையையும் அவசியமான நேரங்களில் உணர்திரையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது பலரின் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

Nokia நிறுவனம் இதனை Nokia X3 touch and type என விளம்பரப்படுத்தியு்ளது. இது விரைவில் விற்பனைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. Nokia ஏற்கனவே x3 என்ற பெயரில் ஒரு செல்பேசியை அறிமுகப் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். புதிய Nokia X3 இல் 5 MP camera, 3G, Wi-Fi, Bluetooth v2.1, FM radio என நவீன செல்பேசியில் இருக்கும் அம்சங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. அத்துடன் பல வண்ண உறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Read more »

இணையத்தில் இலவச இடவசதி வழங்கும் சிறந்த தளங்கள்.


இணையத் தொழிநுட்ப முன்னேற்றம் காரணமாக தற்பொழுது சாதாரணமாக குறைந்த செலவில் அதிவேக இணைய இணைப்பினை பயன்படுத்தக்கூடிய நிலை உள்ளது. (ADSL, WiMAX, 3G & 4G) கணினி பயன்பாட்டில் அதிக நேரத்தை இணையத்துடனேயே செலவிடும் நிலை உள்ளது.

Google போன்ற பிரபலமான நிறுவனங்கள் முழுமையாக இணையம் சார்ந்த இயங்கு தளங்களையும் சேவைகளையும் வெளியிடும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த வகையில் கோப்புக்களை கணினியின் வன்தட்டில் சேமிப்பதுபோல பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான இணைய வழங்கிகளில் சேமித்து வைப்பதன் மூலம் கோப்புக்களை இலகுவாகக் கையாளலாம்.
இணையத்தில் உங்கள் கோப்புகளை பாதுகாத்து வைப்பதற்கு இலவச இடவசதி வழங்கும் சில பிரபலமான தளங்களின் விபரங்கள் இங்கு உள்ளது. பாதுகாக்க வேண்டிய கோப்புக்களை இந்த சேவைகளில் பதிவேற்றி வைப்பதன் மூலம் தகவல் இழப்பை தவிர்த்து கொள்ளலாம், உங்கள் கோப்புகள் இணையத்தில் பாதுகாக்கப் படுவதால் எங்கு சென்றாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் அல்லது இணையத்திலேயே திருத்தம் செய்து சேமிக்கலாம். இலகுவாக பகிர்ந்து கொள்ளலாம்..

1) Windows Live SkyDrive

மிகவும் நம்பிக்கையானது, பாதுகாப்பானது, 25GB இலவச இடவசதி, MS Office கோப்புகளை இணையத்திலேயே உருவாக்கி திருத்திக்கொள்ளும் வசதி. live mesh மென்பொருள் மூலம் 5GB sync இடவசதி. Live, Hotmail கணக்கு வைத்திருப்பவர்கள் இலவசமாக பயன்படுத்தலாம்.

2) Dropbox

நம்பிக்கையானது, பாதுகாப்பானது, பிரபலமானது. இதனைப் பலரும் விரும்பிப் பயன்படுத்தக் காரணம் இதன் synchronize செய்யும் வேகம். பிரபலமான அனைத்து இயங்குதளங்களிலும் இவர்களின் synchronize மென்பொருளை நிறுவிப் பயன்படுத்தலாம். கைத்தொலைபோசிகளிலும் கூட. 2 GB இலவச இடவசதி. நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் உங்கள் இலவச இடவசதியை 10 GB வரை அதிகரித்துக் கொள்ளலாம். இல்லையெனில் கட்டணம் செலுத்தி அதிக இடவசதியினை பெற்றுக்கொள்ளலாம்.  இலவச சேவையைப் பயன்படுத்துபவா்கள் குறிப்பிட்ட ஒரே ஒரு Folder இனை மட்டுமே synchronize செய்ய முடியும்.

3) mediafire

பிரபலமானது, நம்பிக்கையானது, பாதுகாப்பானது. வரையறை அற்ற (Unlimited) இடவசதி. கோப்புக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்று சிறந்த சேவை. synchronize வசதி இல்லை. அதிக விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.

4) ADrive

50 GB இலவச இடவசதி.

5) http://www.wikiupload.com/

6) http://www.filesavr.com/

7) http://www.fileden.com/

8) http://www.badongo.com/

9) http://www.wuala.com/

10) http://www.box.net/

உங்கள் மின்னஞ்சலைப் பதிவுசெய்து கொள்வதன் மூலம் பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற்றுக் கொள்ளுங்கள்.
Read more »

Google Plus உடன் இணையுங்கள் – Google+ vs Facebook ( படங்கள் )


Google நிறுவனத்தின் Google+ சமூக வலைப்பின்னல் பரீட்சார்த்தமாக வெளியிடப்பட்ட பின்னர் அது தொடர்பான பரபரப்பான செய்திகளுக்கு இணையத்தில் பஞ்சம் இல்லை. தொழில்நுட்ப செய்தி நிறுவனங்கள் Google+ தொடர்பான பல புதிய தகவல்களை முந்திக் கொண்டு வெளியிடுகின்றன.

இதுவரை Google+ உடன் இணையவில்லையா?

வலைமனை தளத்தில் இருந்து தகவல்களை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்வதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்வதன் மூலம் Google+ உடன் இணைவதற்கான அழைப்பை (Google+ invitation) பெற்றுக் கொள்ளலாம்.

முன்பே இணைந்தவர்கள் Google+ இல் என்னை இணைத்துக்கொள்ளலாம்:
https://plus.google.com/114372141124526436565

Read more »

அவாஸ்ட் - கணினி பாதுகாப்பு - இலவச ஆண்டி வைரஸ் மென்பொருட்கள் - 5


கணினி பாதுகாப்பு தொடர்பாக விடயங்களில் பிரபலமான சில ஆண்டிவைரஸ்
மென்பொருட்களின் ஆன்லைன் ஸ்கானிங்க் இணைப்புக்களை பார்த்து வந்தோம். இனி இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் தொடர்பான விடயங்களை பார்க்கலாம்.

அவாஸ்ட்

பணம் கொடுத்து வாங்கப்படும் சில ஆண்டிவைரஸ் மென்பொருட்களை விடவும் சிறப்பாக இயங்குகிறது இந்த இலவச மென்பொருள் நாளுக்கு நாள் இதன் பாவனையாளர்கள் அதிகரித்துச் செல்வதற்கு இதுவே காராணம். அவாஸ்ட்டை தரவிறக்கி நிறுவியதும் மின்னஞ்சல் பெயர் தந்து ரெயிஸ்டர் செய்தால் ஒரு வருடத்திற்குரிய இலவச லைசென்ஸ் தருகிறார்கள்.

http://forum.avast.com/index.php

என்ற இணைப்பில் உங்கள் கணினியில் ஏற்படும் வைரஸ் பிரச்சனைகளைப் பற்றிய சந்தேகங்களை ஆங்கிலத்தில் கேட்டு அதற்குரிய தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்.

அவாஸ்ட் பற்றி தமிழ் நண்பன் என்ற வலைப்பதிவில் இருந்து சில தகவல்கள்…

இதை அடிக்கடி அப்டேட் செய்தாலே போதும். வைரஸ் , மால்வேர் , ஸ்பைவேர், ரூட்கிட்கள் (virus, malware,spyware,rootkits) போன்ற அனைத்து வகையான நச்சுநிரல்களையும் கணினியில் நுழைய விடாமலும் பரவாமல் முற்றிலுமாக அழிக்கிறது. கணினிக்கு தேவையான அதிகபட்ச பாதுகாப்பை தருகிறது.

மற்றும் புதிய வசதியாக autosandbox வசதியைக்கூறலாம் இதன் மூலம் வைரஸ் பாதித்த(supsious) பைல்களை நம் கணினிக்கு எந்த இடையூறுமின்றி இயக்கலாம்.

ஒரு மென்பொருள் அல்லது பைலினால் என் கணினிக்கு பாதுகாப்பு கெடலாம் என நீங்கள் அறிந்திருந்தால் இதை நீங்கள் முயற்சி செய்யலாம். இது மேலும் மின்னஞ்சல் பாதுகாப்பு, நெட்வொர்க் பாதுகாப்பு (network), ஆன்லைன் பாதுகாப்பு போன்றவையும் தருகிறது.

இதில் Quick scan மற்றும் Full scan இதோடு boot time scan உள்ளது. யுஎஸ்பிகளையும் சிறப்பாக கவனிக்கிறது. வரைபடத்தோடு வைரஸ் பற்றிய புள்ளிவிவரங்களை
தருகிறது.

டவுண்லோட் செய்வதற்கு - http://www.avast.com/free-antivirus-download

ஏனைய இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்களை விட தாங்களே சிறந்தவர்கள் என்கிறார்கள்.

ஒப்பிட்டு பார்க்க இணைப்பு - http://www.avast.com/best-antivirus



அவாஸ்ட் பற்றி ஏனைய இணைய எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள் என அறிய விரும்புபவர்கள் இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள்.

நீங்கள் ஏற்கனவே அவாஸ்ட் பாவிப்பவராக இருந்தால் இந்த இணைப்பை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.அல்லது உங்கள் அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை இப்பக்கத்தில் இறுதிக்குச் சென்று தெரியப்படுத்துங்கள். அவை மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
Read more »

ஏழாம் அறிவு டிரைலர் சொல்லும் கதை என்ன?

ஏழாம் அறிவு’ படத்தின் கதைதான் என்ன என்பதை அந்தப்படத்தின் டிரைலரை
அடிப்படையாக வைத்து கண்டுபிடித்து யார் எழுதுகிறார்கள் என்பதுதான் ஃபேஸ் புக்கில் இப்போதைய ஹாட்டான விளையாட்டு!  டிரைலரை வைத்து ஆன்லைன் ரசிகர்கள் எழுதிய கதைகளில் இந்தக் கதைக்கு மதிப்பெண்களை வாரி வழங்கியிருகிறார்கள். அந்தக் கதை இதுதான்!
ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு, காஞ்சிபுறத்தில் வாழ்ந்த போதி தர்மர், அரசியல் நெருக்கடிகளால் சீனாவுக்கு நடந்தே சென்று சேர்கிறார். அங்கே அவர் மருத்துவம் பார்க்கிறார். சீனர்களுக்கு களறியை கற்றுக் கொடுக்கிறார். புத்தமத்தின் புதிய பிரிவை தொற்றுவிக்கிறார். அவரது பரம்பரையில் வந்த சர்க்கஸ் கலைஞரான  சூர்யாவை தேடிக் கண்டு பிடித்து, அறுவை சிகிச்சை மூலம் அவரது டி.என்.ஏ.வை தூண்டி விடுகிறார்கள். இதனால் அவருக்கு போதி தர்மரின் திறமைகளான போர்திறம், வீரம், தற்காப்பு பயிற்சி போன்றவை அவருக்கு நினைவிற்கு வருகின்றன.

சீன உளவுத்துறையால் ஆபரேஷன் ரெட் மூலம் இந்தியாவில் நோய்க் கிருமிகளை பரவச்செய்ய அனுப்பபடும் வில்லன் ஜானி, நோக்கு வர்மம் என்ற ஹிப்னாடிஸம் மூலம் தன் வழியில் குறுக்கிடும் ஆட்களை வசியப்படுத்தி கொண்டு ஆதாரம் இல்லாமல் செய்கிறான். அதை முறியடிக்க சூர்யாவிற்கு உதவுகிறார் இளம் விஞ்ஞானி ஸ்ருதி ஹாசன்.

வில்லன் தனது சதியை நிறைவேற்றி இந்தியாவில் இருந்து அவன் வெளியேரும் முன், அவனை அழித்து இந்தியாவைக் காப்பாற்றுகிறார். என்பது தான்.
Read more »

கிறிஸ் பூதம் தமிழர்களே - மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயற்சி!

இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய பாதுகாப்புத் தரப்பினரால் கர்ச்சிதமாக நடாத்தப்படும் நிகழ்வாக கருதப்படுவது கிறிஸ் பூதம் எனப்படும் மர்மமனிதன் விவகாரமாகும். ஶ்ரீலங்காவின் சிங்களப் பகுதியில் ஒத்திகை பார்க்கப்பட்டு தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் உளவியல் யுத்தத்தினை மிகவும் தந்திரமான முறையில் இலங்கை அரசாங்கம் செவ்வனே நடாத்தி வருகின்றது, இதனை நடத்துபவர்கள் இலங்கை படையணியினர் தான் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், அரசாங்கமும் அதன் அடிவருடிகளும் மறுத்தே வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாக சர்வதேச குற்ற விசாரணைக்கு ஶ்ரீலங்கா முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய பாதக நிலை தோன்றியுள்ளதால் தமிழர்களை வ்ருத்திக் கொண்டிருக்கும் மர்ம மனிதன் விவகாரத்துக்கும் முற்றுப்புள்ளை வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழர்கள் மீது உளவியல் யுத்தத்தினை அரசாங்கம் திட்டமிட்டு நடத்திய போதிலும், இதற்கான பழியினை தமிழர்களின் மீதே போடுவதற்கு தேவையான வழி முறைகளைத் தேடிய படைதரப்புக்கு விடை கிடைத்துள்ளது.

2011.09,17 ஆம் திகதி சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியைச் சேர்ந்த சைக்கிள் திருத்தும் கடையை நடாத்தி வரும் இராமையா காண்டீபன் எனும் 26 வயதுடைய இளைஞன் கல்வயல் பகுதியிலுள்ள 11 ஆம் இராணுவ படைத் தளத்துக்குப் பின்புறமாகவுள்ள அடர்ந்த பற்றைக் காட்டுக்குள் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒளிந்திருந்ததாகவும், கைது செய்யச் சென்ற போது, அந்நபர் இராணுவ முகாமை நோக்கி ஓடியதாகவும், ஆகவே இவர் தான் மர்ம மனிதன் எனவும் பொலிஸாரை ஆதாரம் காட்டி பலாலி படைத் தலைமையக ஊடகப் பிரிவினர் சாவகச்சேரியில் நடாத்திய ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் எனும் பெயரில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பீதியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சில சமூக விரோதிகளும் ஆங்காங்கே தங்களது வக்கிர நோக்கங்களை நிவர்த்தி செய்ய முற்பட்ட சம்பவங்களும் நடைபெற்ற போதிலும், அரசாங்கத்தின் துணை கொண்டு ஏவப்பட்ட மர்ம மனிதனை கண்டு பிடிக்க யாருமற்ற சூழ்நிலை இருப்பதனால், இதனை தமிழர்களே செய்வதாக உலகுக்குக் காட்ட அரசாங்கம் எடுத்துள்ள முயற்சியின் புது வடிவமே இதுவாகும்.

இராணுவ தரப்பினரால் இச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை அனைத்தும் அந்தந்த பகுதியில் வாழும் தமிழர்களாலே ஏற்படுத்தப்படுகின்றது, எனக் காரணங்காட்டி காலப் போக்கில் இன்னும் பல தமிழ் இளைஞர்கள் இராணுவ தரப்பினரால் கிறிஸ்பூதம் அல்லது மர்மமனிதனென அடையாளப்படுத்தப்படலாம், இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள் தமிழ் இளைஞர்கள் ஆகும்.
Read more »

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ..

மணமாகாத ஆண்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு...உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறது எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.)முதலில் இந்த அட்டவணையை அவதானிக்க...




தொகுதி 1


A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98


மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக்குறிக்க.கூட்ட வேண்டாம்...(உதாரணமாக...Kannan - 60 20 46 46 20 46 )


பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள்.

 
பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் வகுக்குக.

பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக.உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள்.100 சதவீதம் உண்மையானது...


A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22 J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24 S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-49

 நானும்  சோதித்துப் பார்த்தேன்.அப்படியே ஷாக் ஆயிட்டன்.

Read more »

மரணதண்டனை எதிர்ப்போம்,மனித நேயம் காப்போம்.

 
மன்னிப்பிலும் வலிய தண்டனை வேறேதும் இல்லை என்பது என் ஆணித்தரமான கருத்து.ஒருவன் தன் குற்றவாளியை முழுமனதாய் மன்னிக்கும் போதே அக்குற்றவாளி ஆனவனுக்கு தன் குற்றத்தை உணர்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.மாற்றாக அவனைத் தண்டிக்கும் போது,குற்றவாளி முதலில் குற்றம் செய்கின்றான்,தண்டிப்பவன் இரண்டாவதாய்க் குற்றம் செய்கின்றான்.மொத்தத்தில் இருவருமே நீயாயவாதிகள் இல்லை.

தங்களை நீதிமான்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு,மற்றவர்களைத் தண்டிக்க முண்டியடித்துக் கொண்டிருப்பவர்களின் அக்கிரமங்கள்,இன்னும் வெளியுலகத்திற்குத் தெரியவில்லை.அவ்வளவுதான்.இவ்வுலகத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளுக்குள் இருப்பவர்களை விடக் கொடூரமான குற்றவாளிகள் அதிகாரம் என்ற போர்வையையும்,பண பலம் என்ற முகமூடியையும் அணிந்து கொண்டு வெளியில் இருந்து நியாயம் விசாரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.அது தான் இந்த உலகத்தில் நீதி.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரண்டு வகை.ஒன்று தூண்டுதலின் பேரிலோ,நேரிடையாகவோ குற்றம் செய்தவன்,மற்றையது அவனது காலக் கொடுமையில் அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டவன்.இவர்கள் இருவரையும் வேறு பிரிப்பது என்பது அசாத்தியமானது.ஏனெனில் தீர்ப்பு வழங்கப்படுவது முன் வைக்கப்படும் சாட்சியங்களிலும்,வக்கீலின் வாதத்திலுமே.இதைத்தான் அண்ணா அழகாகச் சொன்னார்,சட்டம் ஒரு இருட்டறை,அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்குஎன்று.ஆனால் இங்கு பெரும்பாலும் பணத்திற்காக வாதாடுபவர்களே வக்கீல்கள்.சாட்சியங்கள் என்பது அதிகாரத்தில் உள்ளவர்களின் கைவினைப் பொருள்.மொத்தத்தில் நீதி என்பது போலியாய் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் தராசுதான்.

இன்று தமிழ் நெஞ்சங்களில் புயலாய் வீசிக்கொண்டிருக்கும் சம்பவம்,முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோரின் தூக்குவிவகாரம்.21 ஆண்டுகளாக கேள்விக்குறியுடன் இருக்கும் மர்மத்துக்கு இவர்களின் தூக்கின் மூலம் விடைகாண முயல்கின்றார்கள். 21 ஆண்டுகள் வெளியுலகத் தொடர்பின்றி, தங்கள் இளமையைத் தொலைத்து, மனதளவில் இறந்தவர்களின் உயிரைப் பறிப்பதன் மூலம் இவர்கள் அடைந்துவிடப்போகும் வெற்றிதான் என்ன??
உண்மையில் குற்றம் செய்தவன் என்றால்,தன் பாவத்தின் சம்பளமாக மரணத்தை எண்ணி மகிழ்வாய் இந்தப் பூமியில் இருந்து விடைபெறுவான்,ஏனெனில் மனிதனின் தண்டனையைப் பார்க்கிலும் அவனின் மனச் சாட்சியின் தண்டனை மகாகொடியது.ஆனால் அநியாயதிற்கு பழி சுமத்தப் பட்டவனோ தன் நியாயத்தை வெளிப்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் அல்லவா விடைபெறப்போகிறான்.
ஒருவன் குற்றவாளியோ அல்லது நிரபராதியோ,ஆனால் அவனுக்கு வழங்கப் படும் மரணதண்டனையானது,அவனுக்கு வழங்கப் பட்ட தண்டனையல்ல.ஏனெனில் அவன்தான் அதை அனுபவிப்பதற்கு இவ்வுலகில் இல்லையே.மொத்தத்தில் அந்தத் தண்டனையை அனுபவிக்கப் போவது அவனை நேசித்த உறவுகளே.

மரணதண்டனை எதிர்ப்போம்,மனித நேயம் காப்போம்.
Read more »

பிரபஞ்ச நியதிகள் – காதல்


உலகில் எல்லா உயிர்களையும், அறிவு பேதமின்றி வளைத்துப்போட்ட எல்லை காதல். ஆதாம் ஏவாளில் ஆரம்பித்து இன்று என்னை உங்களை இன்ன பிற இதயங்களை உயிர்பிக்க அல்லது உயிரறுக்க உற்ற தோழனாய் இருப்பது காதலே. சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சி, சாணக்கியர்களின் தோல்வி, கண்டங்களின் தோற்றம், துரியோதனனின் மரணம் முதல் தற்கொலைகள் கொலைகள் வரை காதல் வியாபித்துவிட்டது. தமிழனின் காதல் ஜாதிகளைத்தாண்டி வருகிறது ஜாதிகளால் பிரிக்கப்படுகிறது. வெள்ளையனின் காதல் காரணத்தால் வருகிறது காரணமின்றிப் பிரிகிறது. நியூட்டனின் மூன்றாம் விதி தோற்கும் இடமும் காதல்தான், நீ ஆழமாக ஆராதிக்கும் பெண் உன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் போகலாம், நீ கண்ணெடுத்தும் பாராத பெண், உன்னை கண்கண்ட தெய்வமாக மதிக்கலாம். ஐயா நியூட்டன் அவர்களே இப்போதுமா சொல்கிறீர்கள் “உலகில் எல்லா தாக்கங்களுக்கும் சமனானதும் எதிரானதும்………??
இந்தப் பதிவு சுயநலக் காதல்களையும், ‘நிச்சயிக்கப்பட்ட’ காதல்களையும் (அந்தஸ்து, ஜாதி, மதம் பார்த்து ‘மேற்கொள்ளப்படும்’ காதல்கள்) தவிர்த்துவிடுகிறது. எல்லாக் காதல்களும் ஜெயிக்காமல் போவதற்கு ஒரே காரணம் காதல் வரையறுக்கப்படாதது மட்டுமல்ல காதல் சூழ்நிலைக் கைதியும் கூட. கைமாறும் தாம்பூலத் தட்டுக்கள் எத்தனை இதயங்களின் கல்லறைக்கான அத்திவாரங்கள்? பெற்றோர்களின் தற்கொலை நாடகங்களில் எத்தனை காதல்கள் பாத்திரம் இழந்து போயின? எதோ உந்துதல் என்னை பதியத் தூண்டிவிட்டது அனால் சொல்லெனாத் துயரங்கள் எதை சொல்வது எதை விடுவது என்று சிந்திக்க வைக்கிறது.
இப்படி வரவேண்டும் காதல் அப்படித்தான் வரவேண்டும் காதல் என்று அறிவு ஜீவிகள் சொல்வார்கள் காதலுக்கு கண்ணே இல்லை இதில் மூளை எங்கனம்? சட்டென்று வருவாள், உடல் எடை குறைவது போல ஒரு சொர்ப்பணம், இதயம் லேசாகி உடலை விட்டு நீங்குவது போல ஒரு பிரமை, இவளின்றி எவ்வண்ணம் அமையப் போகிறது என் உலகு என்ற பயம், மூளையின் அதிகாரம் இன்றி இயங்கும் உடல் உறுப்புகள், அளவுக்கு அதிகமான சிரிப்பு, தேவையற்ற கோபம், தனிமையில் இனிமை, இளையரஜாவில் நாட்டம், அதிகரித்த கவித்துவம், ஆரவாரமான தத்துவங்கள், உனக்குள் உதிக்கும் புதுமைப் பித்தன், வழமைகளில் உள்ள பழமைகள் மேல் வெறுப்பு இவை காதல் வரும் போது தோன்றும் சில அறிகுறிகள். இது இல்லாமல் காதல் வந்த பலரும் இருக்கலாம் இவற்றுடன் சேர்த்து இன்னும் பல அறிகுறிகளுடனும் காதல் வரலாம்; நான் முன்னரே சொன்னது போல; காதல் வரையறை அற்றது.
காதலுக்கு இதயம் சின்னமென்பது சரிதான். விஞ்ஞானமே சொல்கிறது ஒருவர் 80 வயது வாழ்ந்தால் அவரின் இதயம் 40 வருடங்கள் ஓய்வெடுத்திருக்கிறது. இருப்பது போலும் இல்லாது போலும் இருப்பதில் காதலுக்கு நிகர் எவருமில்லை. இதயம் சரிதானே? எதோ ஒரு தருணத்தில் யாரோ யாராலோ காதலிக்கப்பட்டிருக்கிறார்கள், ஏற்கப்படாத இதயம் என்று இங்கு எதுவுமே இல்லை, ஆனால் ஏற்கப்பட்டும் பொருத்தமில்லாத சந்தர்ப்பங்கள் ஏராளம் இருந்திருக்கலாம்.
எனது பார்வையில் காதல் பின்வருவனவற்றை வெறுக்கிறது (இது ஆண்பால் சார்ந்ததெனினும்) நேசித்த நெஞ்சம் நேசிக்க மறுத்தபோதும் நேசித்தவளின் வீழ்ச்சி, அவள் கணவனின் மரணம், அவள் உறவுகளின் பிரிவு, நம்மால் அவள் மேல் ஏற்படும் தேவையற்ற அழுத்தம், அவள் சந்திக்கும் விபத்துக்கள், அவளின் கண்ணீர், அவளின் ஏமாற்றங்கள், அவளின், அவளின், அவளின்………….
நீங்கள் காதலித்திருந்தால் உங்கள் அவர்கள் உங்களை ஏற்க மறுத்திருந்தாலும் (இதுவும் ஆண்பால் சார்ந்ததெனினும்) நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் கீழுள்ள எதோ ஒன்றையேனும் நீங்கள் நேசித்திருப்பீர்களே? அவளின் குழந்தை, அவளுக்கு வாய்த்த ஆடம்பர வாழ்க்கை, அன்பான கணவன், அவளின் வெற்றிகள், அவளின், அவளின், அவளின் …………………….
இதை எழுதுவதற்கு எனக்கிருக்கும் அனுபவம், வயது என்பன பற்றி நிறைய கேள்விகள் எழலாம். என்னுள் பருவ மற்றம் ஏற்படத் தொடங்கிய 2001 தொடக்கம் இன்று இரவு 11.07 வரை நிறைய பார்த்துவிட்டேன், சொந்த அனுபவங்கள் இருக்கின்றன; அளவில் குறைவு, நண்பர்களின் உறவுகளின் ஆயிரம் ஆயிரம் கதைகள், நாம் தமிழராய் இருப்பதால் அளவுக்கதிகமாக வேரறுக்கப்பட்ட கதைகள் சில வேரூன்றிய கதைகள்; வேரூன்றியும் நீரற்று மடிந்த கதைகள், விருட்சமாகியும் வெட்டிச் சாய்க்கப்பட்ட கதைகள், யாதார்த்தம் தந்த பிரிவுகள், சொல்லிய காதல்கள், சொல்ல மறந்த காதல்கள் இன்னும் பல இந்த வரையறைக்கு அப்பாற்பட்ட காதல்கள் எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது. சோகம் என்னவெனில் இணைந்த கரங்கள் ஏதும் இமயம் போல் எழுந்த கதைகள் கேட்டிருக்கிறேன்; பார்க்கவில்லை.
காதலின் எதிரிகளை சீர்திருத்தும் நோக்குடனும் இது பதியப்படவில்லை, காதலுக்கு வரைபடம் வரையவும் நான் தயாராக இல்லை. வாழ்கையின் பாதையில் காதலித்துப் பாருங்கள்; தோற்றால்? நிச்சமாய் எனக்குத் தெரியும் அது உங்களின் பிழை மட்டுமல்ல என்று! ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்தருளிய சிவபுராண வரிகள் சில காதலுக்கும் பொருந்தும் போலும்,
“கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று”
Read more »

Skype உபயோகிப்பவரா நீங்கள்? – இதையும் கொஞ்சம் பாருங்களேன்! (படங்கள்)



Skype நிறுவனம் தனது புதிய Office ஒன்றை, முற்றிலும் நவீனமயமான வடிவமைப்புடன் 54,000 சதுரஅடி பரப்பளவில் கலிபோர்னியாவின் Palo Alto வில் திறந்திருக்கிறது. உலகின் முதற்தர Office ஆக இது திகழ வேண்டுமென திட்டமிட்டு இராப்பகலாய் உழைத்து வடிவமைத்திருக்கிறார்களாம்.
இதன் வடிவமைப்பில் அசந்து போய், அங்கு பணி புரியும் சுமார் 250 பணியாளர்களும் இப்போது புதிய உற்சாகத்துடன் இருக்கிறார்களாம்.
இது தான் அந்த Office












Read more »

ISO கோப்புகளை உருவாக்குவதற்கு…!


விண்டோஸ் இமேஜ் கோப்பு போர்மட்டில் குறிப்பிடத்தக்கது ISO போர்மட் ஆகும். இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் மற்றும் ஒரு சில மென்பொருள்களை ISO போர்மட்டில் மட்டுமே இருக்கும்.
இவ்வாறு உள்ள ISO கோப்புகளை பூட்டபிள் கோப்பாக மாற்ற வேண்டுமெனில் ஏதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே மாற்ற முடியும்.
இவ்வாறு மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் சாதாரண கோப்புகளை ISO பைலாக மாற்றம் செய்வதற்கு இணையத்தில் இருக்கும் மென்பொருள்கள் குறைவு, ஆனால் இந்த இரண்டு பயன்பாடுகளையும் செய்வதற்கு ஒரே மென்பொருள் உதவி செய்கிறது.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்து கொண்டு இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
ஒப்பன் ஆகும் விண்டோவில் DVD to ISO மற்றும் ISO to DVD இரண்டில் விருப்பமான தேர்வினை தேர்வு செய்யவும். தேர்வு செய்து கொண்டு, பின் குறிப்பிட்ட கோப்பை தேர்வு செய்யவும். அடுத்து Run என்னும் பொத்தானை அழுத்தவும்.
குறிப்பிட்ட சில மணி நேரங்களில் கோப்பானது மாற்றம் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.
இந்த மென்பொருள் சீடி, டிவீடி மற்றும் புளுரேடிஸ்க் போன்றவற்றை ஆதரிக்க கூடியது ஆகும். இந்த இயங்குதளத்தை விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, ஏழு ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். ISO கோப்புகளை உருவாக்க இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும்.
இணையதள முகவரி : BDlot DVD ISO
Read more »
 
-